My Blog List

Wednesday 20 February 2013

சிக்கன் டிக்கா பிரியானி

பஞ்சாபி உணவுகளில் மிகவும் பிரபலமானது சிக்கன் டிக்கா. போன்லெஸ் சிக்கனுடன் சில மசாலாக்கள் மற்றும் தயிர் கலந்து ஊற வைத்து skewers(குச்சியில்) சொருகி ஓவனில் சுட்டு எடுக்கப்படும் உணவு தான் இந்த டிக்கா. இன்று உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஆரம்ப உணவுகளில் இந்த டிக்கா இல்லாமல் இருப்பதில்லை.
சிக்கன் டிக்கா தனியாக தான் எப்பொழுதும் செய்து சாப்பிட்டு இருக்கிறேன்.. ஆனால் பிரியாணியுடன் செய்ததில்லை.. முதல் முறையாக பிரியாணியுடன் செய்து பார்த்தேன் மிக மிக ருசியாக இருந்தது.. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்..
தேவையான பொருட்கள்:
டிக்கா செய்ய தேவையான பொருட்கள்:
போன்லெஸ் சிக்கன்1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
தயிர்-1/2கப்
சிக்கன் டிக்கா மசாலாத்தூள் - 2 அல்லது3 தேக்கரண்டி
ரெட் பூட் கலர்- 1 சிட்டிகை
பெப்பரிக்க பவுடர் - 1ஸ்பூன்
எலுமிச்சை சாறு -1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய்/உருக்கிய பட்டர் - 2 தேக்கரண்டி
skewers - 3
சிக்கன் டிக்கா மசாலாத்தூள்
தனி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தனியாத்தூள் -1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
மிளகுத்தூள் -1/2ஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2ஸ்பூன்
ரெடிமேட் தூள்ளுக்கு பதில் இந்த மசாலா பயன்படுத்தலாம

செய்முறை:
* சிக்கனை2 இன்ச் அளவுக்கு சதுரமாக நறுக்கி வைக்கவவும்.
* அதில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், டிக்கா மசாலாத்தூள், ரெட் பூட் கலர், எலூமிச்சை சாறு, பெப்பரிக்க பவுடர், உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக விரவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். (8 மணி நேரம் ஊறினால் இன்னும் சுவையாக இருக்கும்)
* skewers குச்சியினை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊர வைக்கவும் (இப்படி வைப்பதால் குச்சி அதிக சூடுல் எறியாமலும், அதே சமையம் குச்சியில் இருந்து சிக்கன் ஈசியாக எடுக்கவும் முடியும்)
* அவனை250 டி முன் சூடு செய்யவும்.
* ஊறிய சிக்கனை skewer குச்சியில் சிறு இடைவெளிவிட்டு ஒன்றன் பின்பு ஒன்றாக சொருகி அவன் ட்ரேயில் அடுக்கி வைக்கவும்.
* 250 டியில்15 நிமிடங்கள் முதலில் வைக்கவும் பிறகு இதனை வெளி எடுத்து திருப்பி 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும் ( அதிக நேரம் அவனில் வைக்காமல் 3/4 பாகும் வெந்தவுடன் எடுத்துவிடவும்)

பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்;
நீட்டமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 + 1
நறுக்கிய தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1-2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -2
மஞ்சள்த்தூள் - 1/2ஸ்பூன்
எலூமிச்சை சாறு - 1/2 மூடி
ஆரஞ்சு பூட் கலர் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - 1/2கட்டு
,புதினா-1/4கட்டு
நெய்/ எண்ணெய் - 100 கிராம்+ 100 கிராம்
பட்டர்/ நெய் -50கிராம்
பாஸ்மதி அரிசி - 3 கப்
தாளிக்க:
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஜ்ஜி இலை - தலா- 2 + 2
ஷா ஜீரா - 1ஸ்பூன்+ 1 ஸ்பூன்
செய்முறை:
* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நீட்டமாக நறுக்கிய ஒரு வெங்காயத்தினை நன்றாக ப்ரவுன் கலரில் பொறித்து தனியாக வைக்கவும்.
* பாஸ்மதி அரிசியினை 25 நிமிடங்கள் பச்சை தண்ணீரில் ஊறவைக்கவும். 25 நிமிடங்கள் கழித்து தண்ணீர் வடி கட்டிவிட்டு வாணலியில் பட்டர்/நெய் ஊற்றி சிறுது காய்ந்தவுடன் அரிசியினை 5 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.
* வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு ஏலக்காய் ,ப்ரிஜ்ஜி இலை, ஷாஜீரா, உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். கொதி வரும் பொழுது வறுத்த அரிசியினை போட்டு 3/4 பாகம் அரிசி வெந்தவுடன் வடிகட்டி தனியாக வைக்கவும்.
* கடாயில் நெய்/எண்னெய் ஊற்றி காய்ந்த பின்பு தாளிக்க வேண்டிய வாசனை பொருட்கள் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும் பச்ச வாசனை போன பிறகு தக்காளி மற்றும் மசாலாத்தூள்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வேக வைக்கவும் உப்பு தேவைக்கு போடவும் ( தனி தனியாக உப்பு போடுவதால் கவனமாக உப்பு சேர்க்கவும்) கொத்தமல்லி, புதினா சேர்த்து கலந்து சிம்மிலே 5- 10 நிமிடங்கள் வேக வைத்து அனைக்கவும்.

தம் போடும் முறை:
* அடிகணமான பாத்திரத்தில் பொறித்த வெங்காயம் தூவி அதன் மீது வெங்காய தக்காளி கலவையினை பரவலாக சேர்த்து அதன் மீது 5- 6 சிக்கன் டிக்கா துண்டுகளை வைக்கவும். இதன் மேலே பாஸ்மதி சாதம் போடவும். அடுத்த லேயர் பொறித்த வெங்காய்ம், தக்காளி கலவை, சிக்கன் துண்டுகள் என்று வைக்கவும். இரண்டு லேயர் வைக்கவும் மேல் லேயரில் சாதம் போட்டு அதன் மீது பொறித்த வெங்காயம் தூவி அதன் மீது எலூமிசை சாறில் கலர் கலந்து சுற்றி வரை ஊற்றவும்.
* பாத்திரத்தின் மேலே பாயில் பேப்பர் போட்டு அதன் மீது இருக்கமாக மூடியினை மூடி 10 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.அதன் பிறகு15 நிமிடங்கள் சிம்மில் வைத்து அனைக்கவும்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts