My Blog List

Monday 30 April 2012

சௌ சௌ -பச்சபயறு பொரியல்






தேவையானவை:
 சௌ சௌ 1
பச்சபயறு 1 கப் (முளைகட்டியது)
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது

பொடி செய்ய:
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
நிலக்கடலை 5
flax seeds 1 மேசைக்கரண்டி
எள் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 1

தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
----------
சௌ சௌ � ��ோலை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சபயற்றை எட்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு மெல்லிய ஈரத்துணியால் மூடினால் இரண்டு நாளில் முளைகட்டி விடும்.
முடியாவிட்டால் முளைகட்டிய பச்சபயறு எல்லா கடைகளிலும் கிடைக்கும்.
-------
சௌ சௌ ஐ Microwave bowl ல் வைத்து ' H' ல் இரண்டு நிமிடம் வைத்து எடுத்தால் வெந்துவிடும்.
தேவையான உப்பு சேர்� �்து மீண்டும் அரை  நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
முளைகட்டிய பயற்றை அதே போல இரண்டு நிமிடம் வைத்து விட்டு மீண்டும் தேவையான உப்பு சேர்த்து அரை நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
-----
பொடி செய்ய வேண்டியவைகளை எண்ணயில்லாமல் லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
flax seed (rich in Omega-3 fatty acids) எள் இரண்டையும் நாம் தின சமையலில் சேர்ப்பதில்லை.அதனால் பொரியலில் சேர்த்திருக்கிறேன்.
-----
வாணலியில் எண்ணய் வைத்து தாளிக்க வேண்டியவைகள தாளித்து ரெடியாக உள்ள சௌ சௌ,முளைகட்டிய பச்ச பயறு இரண்டையும் சேர்த்து கிளறவேண்டும்.
தயாராக வைத்துள்ள பொடியை சேர்த்து இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவேண்டு

Thursday 26 April 2012

அகத்திக்கீரை சூப்






தேவையானவை:

அகத்திக்கீரை


அகத்திக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
சோள மாவு 1 மேசைக்கரண்டி
தக்காளி 2
பால் 1/4 கப்
வெண்ணெய் 1மேசைக்கரண்டி
மிளகுத் தூள் 1 தேக்கரண்டி
உப்பு � �ேவையானது

செய்முறை:
அகத்திக்கீரையை பொடியாக நறுக்கி நன்றாக அலசி microwave "H" ல் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
ஆறினவுடன் மிக்சியில் விழுது போல அரைக்கவேண்டும்.
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி அரை கப் தண்ணீருடன் மிக்சியில் அடித்து வைக்கவேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை உருக்கி சோளமாவை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
இத்துடன் தக்க ாளி சாறு,கீரை விழுது சிறிது தண்ணீர்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்தவுடன் அடுப்பை 'slim' ல் வைத்து பால் சேர்த்து மிளகு தூள் தூவி அடுப்பை அணைக்கவேண்டும்.

அகத்திக்கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. உடலை குளிர்விக்கும்.

கேப்சிகம் கோசுமல்லி






தேவையானவை:

குடமிளகாய் 2
பயத்தம்பருப்பு 1/4 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:

குடம� �ளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.
ஊறவைத்த பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவும்.
 குடமிளகாய் நன்கு வதங்கிய பின் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்க� ��வதற்கு முன்பு தேங்காய் துருவலை தூவி இறக்கவும்.


மோர் சாதம்





தேவையானவை:

பச்சரிசி 1 கப்
தண்ணீர் 5 கப்
பால் 1/2 கப்
மோர் 2 கப்
பச்சைமிளகாய் 3
சின்ன வெங்காயம் 8
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கடுகு 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசியை நன்றாகக் களைந்து 5 கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து ஸ்லிம்மில் வே கவைக்கவேண்டும்.( 20 நிமிடம் ஆகும்)
அதில் அரை கப் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவேண்டும்.
பின்னர் மத்தில் நன்றாக கடைய வேண்டும்.(மிக்சியில் போடக்கூடாது)
சின்ன வெங்காயத்தையும்,பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
தேவையான உப்புடன் பொடியாக நறுக்கிய இஞ்சி,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
இரண்டு கப் மோரில் கடுகு தாளித� �து இதில் ஊற்ற மோர் சாதம் ரெடி.

வெய்யிலுக்கு அருந்தினால் உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.

Tuesday 10 April 2012

சீயம்

 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – கால் கப்

உளுந்து – கால் கப்

பெரிய வெங்காயம் – 2

தேங்காய் துருவல் – அரை கப்

உப்பு – தேவையான அளவு

சமையல் சோடா – ஒரு சிட்டிகை

தாளிக்க :

கடுகு

உளுந்து

செய்முறை:

உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் உளுந்தை தாளித்து, பிறகு பொடியாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

அரைத்த மாவில் உப்பு, சமையல் சோடா, வதக்கிய வெங்காயம் போட்டு நன்றாக கலக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மாவில் இருந்து உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

சுவையான, மொறுமொறுப்பான சீயம் தயார்.

மாவில் இருந்து உருண்டைகளாக எடுத்து போடும் முன், ஒவ்வொரு உருண்டைக்கும் கையில் தண்ணீர் தொட்டு கொண்டு மாவில் இருந்து எடுத்தால் உருண்டை சுலபமாக உருட்ட வரும், கையில் ஒட்டாமல் எண்ணெயில் விழும்.

பால் பணியாரம் Sweet milk

Sweet milk
Sweet milk Sweet milk Sweet milk
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – அரை கப்
உளுந்து – அரை கப்
தேங்காய் – ஒன்று
பால் – ஒரு டம்ளர்
ஏலக்காய்
சீனி – தேவையான அளவு
செய்முறை:
உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு(தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) அரைக்கவும். தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சீனி சேர்த்து வைக்கவும்.
அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்.
நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்..
பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.
காரைக்குடி பக்கம் இருப்பவர்கள் வீட்டில் நடக்கும் திருமணம், விஷேசங்கள் போன்றவற்றில் இந்த பலகாரம் கண்டிப்பாக இருக்கும்.

Popular Posts

Popular Posts