My Blog List

Friday 25 October 2013

போன்லெஸ் கிரீன் ஃபிஷ் ஃப்ரை - Boneless Green Fish Fry

போன்லெஸ் கிரீன் ஃபிஷ் ஃப்ரை - Boneless Green Fish Fry

 தேவையான பொருட்கள்;
ஃப்ரெஷ் ஃபிஷ் போன்லெஸ் - 1 கிலோ
தேவைக்கு மஞ்சள் தூள் ,
மற்றும் உப்பு
நன்கு கழுவி எடுத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.

 அரைக்க:
பச்சை மிளகாய் - 6
மல்லி இலை - 2 கைப்பிடி
புதினா இலை - 1 ஒரு கைப்பிடி
விரும்பினால் கருவேப்பிலை
சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
பொரிக்க தேவைக்கு எண்ணெய் .

 அரைத்த விழுதை ஒரு ப்லேட்டில் எடுத்து 
அத்துடன் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,
2 டீஸ்பூன் மிளகுத்தூள்,
ஒரு டீஸ்பூன் சீரகத்தூள்,
ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள்,
கால் அல்லது அரைடீஸ்பூன் கரம் மசாலா,
தேவைக்கு எலுமிச்சை ஜூஸ்(பெரிய பழம் )
ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்,
உப்பு சிறிது சேர்த்து விரவி வைக்கவும்.

 விரவிய மசாலாவை ஒவ்வொரு துண்டாக எடுத்து தடவி வைக்கவும்.

 ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் நிச்சயம் ஊற வேண்டும் அல்லது ஒரு நாள் முழுவதும் வைத்தாலும் சரி.

விரவிய மீனை பிரட்ட
மைதா, கார்ன்ஃப்லோர்,ப்ரெட் கிரம்ஸ் தலா 2 டேபிள்ஸ்பூன்,சிறிது உப்பு கலந்து வைக்கவும்.

 ஊறிய மீனை லேசாக மாவில் பிரட்டி எடுக்கவும்.( நான் எப்பவும்,மைதா,கார்ன்ஃப்லோர், ப்ரெட் கிரம்ஸ் சம அளவு போட்டு மிக்ஸ் செய்து ஒரு பாக்சில் வைத்திருப்பேன்)

 தவாவில் தேவைக்கு எண்ணெய் விட்டு சாலோ ஃப்ரை செய்து எடுக்கவும்.

 நெருப்பு சரியான சூட்டில் வைத்து பதமாக இரு புறமும் சிவற வைத்து பொரித்து எடுக்க வேண்டும்.

சூப்பர் சுவையுள்ள ஆரோக்கியமான ஃபிஷ் ஃப்ரை ரெடி.
வித்தியாசமாக ஃபிஷ் ஃப்ரை செய்ய நினைத்தால் இதை செய்து பாருங்க.உப்பு காரம் அளவாய் இருக்க வேண்டும்.

shared via

Tuesday 22 October 2013

பூண்டு சட்னி - Garlic Chutney

பூண்டு சட்னி - Garlic Chutney

இந்த வார என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்;
பூண்டு - 6-8 பற்கள்(பெரிய பற்கள்)
மிளகாய் வற்றல் - 2
பெரிய தக்காளி - 1
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு இணுக்கு.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்.

 பூண்டு பற்களைத் தோல் உரித்து வைக்கவும்.மிளகாய் வற்றலை சுட்டோ லேசாக எண்ணெயில் பொரித்தோ எடுக்கவும்.தாளிக்க வைத்துள்ள எண்ணெயிலேயே பொரித்து எடுக்கலாம்.

சிறிய மிக்ஸி ஜாரில்  பூண்டு,வற்றல், உப்பு போட்டு முதலில் அரைக்கவும்.

 பின்பு அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

 நன்கு அரைத்து எடுக்கவும்.

 கடாயில் எண்ணெய் விடவும், சூடானவுடன் கடுகு கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.

 அரைத்த சட்னியை சேர்க்கவும். பச்சை வாடை போகும் வரை அடுப்பை மீடியமாக வைத்து நன்கு வதக்கவும்.

 இப்படி சட்னி வற்றி தொக்கு போல் ஆகும் அடுப்பை அணைக்கவும்.தக்காளி,பூண்டின் பச்சை வாடை சுத்தமாகப் போய் மணமாக இருக்கும்.

சுவையான சத்தான பூண்டு சட்னி  ரெடி.
இட்லி தோசையுடன் பரிமாறவும்.காரசாரமாக இருக்கும்.

shared via

Sunday 20 October 2013

கோதுமை கேரட் அல்வா kothumai kerat alwa

கோதுமை கேரட் அல்வா

தேவையானப்பொருட்கள்:

கோதுமை மாவு - 1/2 கப்
கேரட் (நடுத்தர அளவு) - 2
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது

செய்முறை:

கேரட்டை கழுவி, தோலை சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.  வெட்டிய கேரட் துண்டுகளை சிறிது நீர் சேர்த்து வேக விட்டு, சற்று ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் நெய்யை விட்டு, அதில் கோதுமை மாவை போட்டு, மிதமான தீயில் நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்.  பின்னர் அத்துடன் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சர்க்கரையையும் சேர்த்து கை விடாமல் கிளறவும்.  சர்க்கரை நன்றாகக் கலந்து, அல்வா கெட்டியாக  பந்து போல்  பாத்திரத்தில் ஒட்டாமல்   வரும் பொழுது, ஏலக்காய் தூளைச் சேர்த்துக் கிளறி, தேவைப்பட்டால், மேலும் சிறிது  நெய்யையும் ஊற்றிக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்திலோ, தட்டிலோ கொட்டிப் பரப்பி விடவும்.  முந்திரியை சிறிய துண்டுகளாக்கி, அல்வாவின் மேல் தூவி விடவும்.

கவனிக்க:  இனிப்பு அதிகம் தேவையென்றால், சர்க்கரையின் அளவை சிறிது கூட்டிக் கொள்ளவும்.

shared via

Friday 18 October 2013

பண்டிகை வடை pandikai vadai

பண்டிகை வடை pandikai vadai

பண்டிகை நாட்களில், சிலர் வீடுகளில் வெங்காயம், சோம்பு போன்ற மசாலாப் பொருட்களை சமையலில் சேர்க்க மாட்டார்கள். இப்படி வெங்காயம், சோம்பு சேர்க்காமல் செய்யப்படும் வடையை "பண்டிகை வடை" என்று அழைப்பார்கள்.

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 3/4 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

பருப்புகள் மூன்றையும் ஒன்றாகப் போட்டு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.  பின்னர் நன்றாகக் கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து, மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

இஞ்சி, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும்.  சீரகத்தையும் மாவில் போட்டு நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.  எண்ணை காய்ந்ததும், எலுமிச்ச அளவு மாவை எடுத்து வடையாகத் தட்டி, நடுவில் துளையிட்டு, எண்ணையில் போட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.

shared via

Tuesday 15 October 2013

How to Buy Vegetables! - காய்கறி வாங்க தெரியுமா?

How to Buy Vegetables! - காய்கறி வாங்க தெரியுமா?

by tnkesaven
New

தக்காளி

சிலர் செக்கச் செவேலென சிவந்து, கனிந்திருக்கிற

தக்காளிப் பழங்களைத்தான் தேடுவார்கள்.

முழுவதுமாக சிவந்திருக்கும் தக்காளிச் சாறில் அமிலம்

கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

அதனால் பச்சையும் மஞ்சளும் கலந்து செங்காயாக

இருக்கும் காய்களுக்கு முதலிடம் கொடுங்கள்.

உருண்டையாக கெட்டியாக இருக்கும் காய்களாகப்

பார்த்து வாங்குங்கள்.

முண்டும் முடிச்சுமாக இருந்தால் அதில் சாறு

அதிகமாக இருக்குமே தவிர சதைப்பற்று இருக்காது.

வெண்டைக்காய்
வெள்ளையும் இளமஞ்சளும் கலந்து மயக்கும்

வெண்ண்டைக்காயை விட பச்சைப்பசேலென

மினுக்கும் காய்கள்தான் சிறந்தவை.

வெண்டைக்காய் காம்புப் பகுதியில் இருந்துதான்

முற்றத் துவங்கும்.

எனவே காம்பை உடைத்துப் பார்த்து வாங்கலாம்.

உருளை
முளைவிட்ட காய்களையும் ஆங்காங்கே பச்சை நிறம்

பூசியிருக்கும் காய்களையும் ஒதுக்குவது நல்லது.

செம்மண்ணில் விளைந்த உருளையில் இனிப்புச்சுவை மிகுந்து இருக்கும்.

கத்தரி
தடித்த காம்புள்ள கத்தரிதான் பிஞ்சு.

காம்பு மெலிந்திருந்தாலோ, காயை அழுத்திப் பார்த்தால்

கெட்டிப்பட்டிருந்தாலோ அவற்றை மறுத்துவிடுங்கள்.

சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் அதனுடன்

நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்க்கும் உத்தி ஊரறிந்த

ரகசியம். ஆனால் உருளைக்கிழங்குக்குப் பதில் சோயா

உருண்டைகளை வேகவைத்துச் சேர்ப்பதும் கைமேல்

பலன் தரும்.

சோற்று உருண்டையைப் போட்டாலும் உப்பு குறைய

வாய்ப்பு இருக்கிறது.
டீ போடும்போது கடைசியில் சர்க்கரை சேர்ப்பதுதான்

வழக்கம். இதையே தலைகீழாக முயற்சிக்கலாம்.

முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரை சேர்த்து

கொதிக்க விடுங்கள்.

பிறகு டீத்தூள் சேர்த்து வடிகட்டி,

சூடான பால் சேர்த்துப் பாருங்கள். டீ திடமாகவும்,

சுவையாகவும் இருக்கும்.

இதில் இன்னொரு நல்லதும் இருக்கிறது.

இப்படி முதலிலேயே சர்க்கரை சேர்ப்பதால் டீத்தூளின்

கரை பாத்திரத்தில் ஒட்டாது,

பாத்திரத்தைக் கழுவுவது எளிது!

வெண்ணெய் காய்ச்சும்போது கறிவேப்பிலை அல்லது முருங்கை இலையைப் போட்டு காப்ச்சுவதுதான் வழக்கம். அதற்குப் பதிலாக

வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது ஒரு ஸ்பூன்

வெந்தயத்தை போடுங்கள்.

நெய் அருமையான மணத்துடன் இருப்பதுடன்,

கசக்கவும் செய்யாது

courtesy;''the indhu''

Show commentsOpen link

Monday 14 October 2013

Choco Wafers Chocolate Recipe

Choco Wafers is a recipe easy and quick to make. It is such a simple chocolate recipe that you can make it at home without any problems. If you are looking for a chocolate dessert recipe that will be mouth watering but not take too much effort, then go for Choco Wafers. This simple chocolate recipe can be prepared at very short notice and almost without any preparations in advance.

People are often reluctant to try out new recipes because the long list of exotic ingredients takes a lot of time and effort to assemble. The ingredients of the Choco Wafers recipe are available universally as it requires no specifically local products. So no water where in the world you are situated, you can try this chocolate recipe without hesitation.

Choco Wafers does not demand that you know too many complicated skills from the cook book. The only trick in making Choco Wafers is to do it fast. You have to use your hands quickly to prevent the wafers from getting sodden by the chocolate.

Ingredients for Choco Wafers Recipe:
1. 2 large bars of milk chocolate, it could be any brand as long it is plain mild chocolate without any flavors.
2. Milk 100 ml
3. Dry Fruits- Raisins and nuts (chopped finely)
4. Butter 2 tablespoon
5. 10 Wafer biscuits
6. Vanilla ice cream 1 bar
7. Home foil
8. Refrigerator with ice box

Procedure for Choco Wafers:

Heat a shallow pan on high flame for 3 minutes.
Melt the two bars of milk chocolate in it gradually. Let it melt but not burn.
When you feel that the chocolate is sufficiently liquified, start adding milk.
Stir in the milk very gradually giving it ample time to mix with the molten chocolate. How much milk you add will depend on your taste.
Now let this caramel-like liquid simmer for some time until it starts to thicken.
Add the chopped dry fruits and mix it well.
Now, place sheet of aluminum foil on the kitchen slab; it should be proportional to the number of wafers you are using.
Dip the wafers one by one in the molten chocolate and place them one after the other on the foil in a standing position. You may have to ask someone to support the wafers in a standing position while you dip them.
Pour the remaining chocolate on this cylindrical formation of wafers and wrap the foil around it.
Refrigerate in the chiller for at least one hour.
Serve it cold as a dessert with scoops of vanilla ice cream.

This Choco Wafers recipe could the answer to your tension about making a 'special' dessert every time you have house guests. This chocolate recipe could also be a great surprise idea for a romantic evening.

Saturday 12 October 2013

பழுத்த மிளகாய் பூண்டு கோழி வறுவல் ரெட் சில்லி கார்லிக் சிக்கன் ஃப்ரை Cayenne Pepper Garlic Chicken Fry Red Chilli Garlic Chicken Fry

பழுத்த மிளகாய் பூண்டு கோழி வறுவல் / ரெட் சில்லி கார்லிக் சிக்கன் ஃப்ரை / Cayenne Pepper Garlic Chicken Fry / Red Chilli Garlic Chicken Fry

by Asiya Omar
சமைத்து அசத்தலாம்

கோழியை எப்படி சமைத்தாலும்  ருசியாகத்தான் இருக்கும். அதிலும் ஃப்ரை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.ஒரே மாதிரி ஃப்ரை செய்தாலும் கொஞ்சம் சலித்து விடும் தான்.ஒரு மாற்றமாக பழுத்த மிளகாய்,பூண்டு சேர்த்து செய்த கோழி வறுவல் எப்படி என்று பார்ப்போம்.எண்ணெயும் குறைவாகவே செல்லும்.

தேவையான பொருட்கள்;
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 300  கிராம்
பழுத்த சிவப்பு மிளகாய் - 4-5 (காரம் அவரவர் விருப்பம்)
பூண்டு - 6 பல்
மீடியம் சைஸ் வெங்காயம் - 1
மீடியம் சைஸ் - தக்காளி - 1
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
விரும்பினால் - ரெட் கலர் - பின்ச்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லி ,கருவேப்பிலை சிறிது.

செய்முறை:

 பழுத்த மிளகாய், தக்காளி,வெங்காயம்,பூண்டு,கெட்டி தயிர்,சேர்த்து மிக்ஸியில் கவனமாக அரைத்து எடுக்கவும்.

 சிக்கனை சிறு துண்டுகளாக்கி நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.

சிக்கனுடன்  அரைத்த விழுது,தேவைக்கு சிறிது  உப்பு,கலர் சேர்க்கவும்.

 நன்கு விரவி ஒரு மணி நேரமாவது ஊற வைக்கவும்.

 அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊறிய சிக்கனை போட்டு மூடி 15 நிமிடம் வேக விடவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது. சிக்கனிலேயே தண்ணீர் ஊறும். தண்ணீர் நன்கு வற்ற வைக்கவும்.




 கடாயில் எண்ணெய் விடவும் நன்கு சூடானவுடன் கருவேப்பிலை போடவும்,வெந்த சிக்கன் சேர்க்கவும்.நன்கு பிரட்டி பிரட்டி  விடவும்.


 சிக்கனில் மசாலா எல்லாம் ஓட்டிக் கொண்டு ஃப்ரை ஆகி வரும்.

 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும். பிரட்டி விட்டு பரிமாறவும்.

சூப்பர் சுவையுள்ள ரெட் சில்லி கார்லிக் சிக்கன் ஃப்ரை ரெடி.

ரைஸ் வகைகளுக்கு பக்க உணவாக சாப்பிடலாம்.சப்பாத்தியில் ரோல் செய்தும், ப்ரெட் சாண்ட்விச்சில் வைத்தும்  மற்றும் வெறும் ஸ்டார்டராகவும் கூட  பரிமாறலாம்.இதனையே எலும்புடன் கூடிய சிக்கன் என்றால் கொஞ்சம் கிரேவி மாதிரியும் செய்யலாம்.அதற்கு தக்காளி,வெங்காயம்,தயிர் அளவை கூட்டிக் கொள்ள வேண்டும். விரும்பினால் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கலாம்.கிரேவி செய்முறை செய்த பின்பு படம் இணைக்கிறேன்.

Show commentsOpen link

Thursday 10 October 2013

Navratri special: Faraali Idli Sambhar

Navratri special: Faraali Idli Sambhar

by Agencies

The famous southie snack can be converted into a healthy and delicious faraal snack by making the idlis with sanwa millet and the sambhar with boiled vegetable purée. Serve with peanut curd chutney for an added dash of innovativeness.

Soaking time:  8 hours
Preparation Time: 20 mins
Cooking Time: 40 mins
Makes 4 servings

Ingredients

For the idli

1 cup sanwa millet (sama)
1/2 cup sago (sabudana)
1 cup fresh curds (dahi)
4 tsp ginger-green chilli paste
rock salt (sendha namak) to taste
1 tsp oil
1 tsp cumin seeds (jeera)
1 cup boiled and peeled potato cubes
2 tsp sugar
1 tsp lemon juice
1/2 cup roasted peanut powder (optional)

For the sambhar

5 tsp coriander (dhania) seeds
4 round red chillies (boriya mirch)
2 tbsp roasted peanuts
1 tbsp grated dry coconut (kopra)
25 mm (1") piece cinnamon (dalchini)
1 1/2 cups bottle gourd (doodhi / lauki) cubes
1 1/2 cups peeled and chopped yam (suran)
1 cup peeled and chopped potatoes
rock salt (sendha namak) to taste
2 tsp oil
1 tsp cumin seeds (jeera)
1 tsp lemon juice

For the chutney

1 cup roasted and coarsely powdered peanuts
3/4 cup fresh curds (dahi)
1 1/2 tsp ginger-green chill paste
1 tbsp sugar
1/2 tbsp lemon juice
Rock salt (sendha namak) to taste

Method 
 
For the idli
Clean and wash the sanwa millet and sago.
Drain, add the curds, 2 tsp of ginger-green chilli paste, rock salt and 3 tbsp water and mix well.
Keep aside to soak for at least 6 to 8 hours.
Grind the mixture in a blender to a smooth batter without adding any water. Keep aside.
For the stuffing, heat the oil in a non-stick kadhai and add the cumin seeds.
When the seeds crackle, add the remaining 2 tsp of ginger-green chilli paste and sauté on a medium flame for a few seconds.
Add the potatoes, sugar, lemon juice and rock salt, mix well and cook on a slow flame for 5 minutes.
Cool and divide the stuffing into 16 equal portions.
Put 1 tbsp of the idli batter into greased idli moulds, spread a portion of the potato stuffing over it.
Sprinkle a little peanut powder over it and top it up with another tbsp of the idli batter.
Steam in an idli steamer for 10 minutes or till done.
For the sambhar

Combine the coriander seeds, 2 round red chillies, peanuts, dry coconut and cinnamon and blend in a mixer to a fine powder. Keep aside.
Boil a vesselful of water, add 1 cup of bottle gourd, 1 cup of yam and potatoes and cook for 8 to 10 minutes or till the vegetables are completely cooked.
Drain, cool and blend in a mixer to a smooth purée.
Transfer it to a deep non-stick pan, add 4 cups of water, mix well and simmer for 7 to 8 minutes, while stirring once in between.
Add the remaining ½ cup of bottle gourd and yam, ground powder and rock salt, mix well and cook for 3 to 4 minutes.
For the tempering, heat the oil in a small non-stick pan and add the cumin seeds.
When the seeds crackle, add the remaining 2 round red chillies and sauté for a few seconds.
Pour the tempering over the boiling sambhar, mix well and simmer for another 3 to 4 minutes.
Add the lemon juice and mix well.
For the chutney

Combine all the ingredients and blend in a mixer till smooth.
Store refrigerated in an air-tight container and use as required.
How to serve

Serve hot idlis with sambhar and peanut curd chutney.
Here is the original recipe source: Faraali Idli Sambhar by Tarla Dalal

Show commentsOpen link

Wednesday 9 October 2013

போன்லெஸ் சிக்கன் மந்தி - Boneless Chicken Mandi

போன்லெஸ் சிக்கன் மந்தி / Boneless Chicken Mandi

by Asiya Omar
சமைத்து அசத்தலாம்Today,

அரபு நாடுகளில் எப்படி சவர்மா, பார்பிகியூ பிரசித்தமோ அதே போல் இந்த மந்தி ரைஸ், கப்ஸா ரைஸ் போன்றவையும் மிகப் பிரபலம்.ஏற்கனவே நான் சிக்கன் கப்ஸா ரைஸ் , மட்டன் கப்ஸா குறிப்பை என் அரேபிய உணவுகள் பகுதிகளில் பகிர்ந்திருக்கேன்.
நம் நாட்டில் பிரியாணி போல் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த மந்தி ரைஸ் பிரபலம்.நாம் இங்கு நிறைய மசாலா எல்லாம் சேர்த்து பிரியாணி செய்கிறோம்.ஆனால் அரபு நாடுகளில் காரம் ,மசாலா அதிகம் இல்லாமல் மைல்டாக ஆரோக்கியமாக செய்து சாப்பிடுவது வழக்கம்.
சிக்கன், மட்டன், மீன் என்று எல்லாவற்றிலும் இதனை வெரைட்டியாக செய்யலாம்.முழுக் கோழியை பாதியாக வெட்டி தோலோடு கிரில் செய்தோ அல்லது அரிசியுடன் வெந்தோ இந்த மந்தி ரைஸ் செய்வார்கள்

இப்ப சிக்கன் மந்தி சிம்பிளாக எப்படி செய்வதுன்னு பார்ப்போம்.
நான் இங்கு ஒரு மாற்றமாக எலும்பில்லாத சிக்கனை பேக் செய்து   மந்தி ரைஸ் செய்திருக்கேன்.
மந்தி ரைஸ்க்கு தேவையான பொருட்கள்;
எலும்பில்லாத சிக்கன் நெஞ்சுப்பகுதி - 800 கிராம்.
பாசுமதி அரிசி - அரைக்கிலோ
எண்ணெய் நெய் - 50+ 50 (100 மில்லி)
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 (100 கிராம்)
பட்டை  -2 துண்டு,
கிராம்பு, ஏலக்காய்  - தலா 4
(விருப்பப்பட்டால் தாளிக்க சிறிது முழு மிளகு,சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்)
காய்ந்த எலுமிச்சை - 1 அல்லது இரண்டு
knorr ஆல் ஸ்பைஸ் மிக்ஸ்(சிறிய பேக் 2 ) அல்லது சிக்கன் ஸ்டாக் - 2
உப்பு  சேர்க்க வேண்டாம், இவற்றிலேயே உப்பு இருக்கும்.நான் இங்கு knorr ஆல் இன் ஒன் ஸ்பைஸ் சேர்த்து செய்தேன்.
பால் - 50 மில்லி, 2 பின்ச் சாஃப்ரான்.
அலங்கரிக்க:
எண்ணெயில் வறுத்த முந்திரி,காய்ந்த திராட்சை,சிவற வறுத்த  வெங்காயம் ரெடி செய்து கொள்ளவும்.

தேவையான பொருட்களை இப்படி முதலியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் அளவு - 4 நபர்கள்.

இனி சிக்கன் பேக் செய்வதற்கு எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

 கோழி நெஞ்சுப் பகுதியை நன்கு சுத்தம் செய்து அலசி தண்ணீர் நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும்.

 800 கிராம் சிக்கனுக்கு சிக்கன்  பார்பிகியூ மசாலா 4 டீஸ்பூன்,2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு எலுமிச்சை ஜூஸ், 1 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு விரவி வைக்கவும்.பார்பிகியூ மசாலா இல்லாதவர்கள் 2 டீஸ்பூன் சில்லி பவுடர் மட்டும் கூட உபயோகிக்கலாம்.

 சிக்கனை பேக் செய்ய ஒரு நான்ஸ்டிக் பேக்கிங் ட்ரேயில் ஆலிவ் ஆயில் ஒரு டேபிள்ஸ்பூன் தடவி ரெடி செய்த சிக்கன் துண்டுகளை வைக்கவும்.

 முற்சூடு செய்த எலெக்ட்ரிக் ஓவனில் 250 டிகிரிக்கு செட் செய்து பேக் செய்ய வேண்டும்.அனலை மேலும் கீழும் செட் செய்ய வேண்டும்.சிக்கன் வைத்த ட்ரேயை ஓவனில் வைத்து இருபது நிமிடம் கழித்து திற்ந்து பார்க்கவும்.

 சிக்கன் துண்டுகள் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி மறுபுறம் வைக்கவும்.

 ஓவனுக்கு ஓவன் செய்முறைக்கு தகுந்த படி நேரம் மாறுபடும்.உங்கள் பக்குவப் படி பேக் செய்து எடுக்கவும். தோலோடு சிக்கன் உபயோகித்தால் வைத்தால் கிரில் ப்லேட் வைத்து கிரில் செய்து எடுக்கலாம்.

 சிக்கன் நன்கு வெந்த பிறகு கவனமாக கையுறை போட்டு வெளியே எடுக்கவும்.

இனி மந்தி ரைஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும். பட்டை,கிராம்பு,ஏலக்காய் போடவும்.லேசாக வெடிக்க ஆரம்பிக்கும்.(விருப்பப்பட்டால் தாளிக்க சிறிது முழு மிளகு,சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்)

நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

 நன்கு வதக்கவும் லேசாக சிவறட்டும்.

 இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வதக்கவும்.

 ஊறிய அரிசி சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

 அரிசியின் அளவிற்கு இரண்டு அளவு தண்ணீர் வைக்கவும்.காய்ந்த எலுமிச்சையை ஃபோர்க்கால் துளை செய்து போடவும்.knorr ஆல் ஸ்பைஸ் சேர்க்கவும்( 2 அல்லது 3டீஸ்பூன்) உப்பு சேர்க்கவில்லை.அதுவே அதிக உப்பு கரிப்புடன் இருக்கும்.

 அரிசி ஒரு சேர கொதித்து முக்கால் வேக்காடு வெந்து வரும் பொழுது தயாராக உள்ள பேக்ட் சிக்கனை மேலே பரத்தி வைக்கவும்.

50 மில்லி சூடு பாலில் 2 பின்ச் சாஃப்ரான் போட்டு காய்ச்சி வைக்கவும்.ஒரு அடுப்பு கறி துண்டை அடுப்பில் கங்காக தயார் செய்யவும்.

 சாஃப்ரான் மில்க்கை தயார் செய்து வைத்த மந்தி சோற்றின் மீது ஊற்றவும்.ஒரு சிறிய தட்டில் அனலாக இருக்கும் கங்கை வைக்கவும். அடுப்புக்கரி மணம் மந்தி ரைஸில் பரவும்.

 அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி சிம்மில் கால் மணி நேரம் வைக்கவும்.அடுப்பை அணைக்கவும்.

 மீண்டும் கால் மணி நேரம் கழித்து திறந்து நன்கு பிரட்டி பரிமாறவும்.

 வறுத்த வெங்காயம் முந்திரி திராட்சை அலங்கரித்து ஒரு பெரிய சகன் (பவுல்)அல்லது ப்லேட்டில் பரிமாறவும்.

சுவையான சிக்கன் மந்தி ரெடி.

இதற்கு பக்க உணவாக ஃப்ரெஷ் கிரீன் சாலட், ஃப்ரெஷ் தக்காளி வெங்காய சட்னி தான் காம்பினேஷன்.

என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு இது. இந்த மந்தி ரைஸில் இந்த சாலட்டை போட்டு கொஞ்சம் அந்த தக்காளி வெங்காய சட்னி சிக்கன் மிக்ஸ் செய்து எல்லாம் கலந்து சாப்பிடுவதுண்டு.சும்மா மிக்ஸ் செய்யாமல் தனித்தனியாகவும் சாப்பிடலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்க. எப்பவும் மந்தி ரைஸ் விடுமுறை நாட்களில் வெளியே வாங்கி விடுவதுண்டு. எங்க பக்கம் 20 திர்ஹமுக்கு சூப்பர் மந்தி ரைஸ் கிடைக்கும் மூன்று பேர் சாப்பிடலாம்.ஆனால் உங்கள் எல்லோருக்காகவும் செய்து பகிர வேண்டும் என்பதாலேயே இந்த ரெசிப்பி பகிர்வு. அல்ஹம்துலில்லாஹ்!

Show commentsOpen link

Tuesday 8 October 2013

கூட்டாஞ்சோறு / Kootanchoru

கூட்டாஞ்சோறு / Kootanchoru

by Santhi
சமைத்து அசத்தலாம் samayal kurippugal

நெல்லை கிராமப்புறங்களில் பாரம்பரிய உணவான  இந்த கூட்டாஞ்சோறு மிகவும் பிரசித்தமானது.அதனை எப்படி இலகுவாக செய்வது என்று இந்த வார தமிழர் சமையலில் பார்ப்போம்.

நாட்டுக்காய்கறிகள்,கீரை,அரிசி,பருப்பு, அரைத்த மசால் என்று கூட்டாக சேர்த்து சமைத்து அசத்துவது  தான் கூட்டாஞ்சோறு .

மலரும் நினவுகள்...35 வருடம்  பின்னோக்கி செல்கிறேன்.

இந்த கூட்டாஞ்சோறு எங்கள் சிறு வயதின் விளையாட்டு சமையலில் இடம் பெற்ற ஒரே உணவு. வட்டாரத்தில் தோழிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து  சமைத்து சாப்பிடுவோம். எப்பொழுதும் மூடி கிடக்கும் எங்கள் பழைய வீட்டை திறந்து விடுமுறை நாட்களில் நாங்களே அடுப்பு பற்றி ஆளுக்கொரு பொருளாய் கொண்டு வந்து சமைத்து உண்டோம் எனபதை நினைக்கும் பொழுது இப்பொழுது ஆச்சரியமாகத்தான் உள்ளது.அந்த வீட்டில், கருவேப்பிலை,தென்னை,முருங்கை மரம் பின்பக்கம் இருக்கும், திறந்த வெளியில் விறகு அடுப்பு பற்றி, ஒரே பானையில் சமைத்து உண்ட அந்தக்காலம் எல்லாம் இனி திரும்ப வரவா போகிறது ?

எங்கள் தெருவில் சுளுக்கு தடவும் ஒரு வைத்தியர் இருக்கிறார்.அவர் வீட்டில் வயதான பெத்தம்மா ஒருவர் இருந்தார். அவர் அம்மியில் மஞ்சள்,சீரகம், மிளகாய் வற்றல்,தேங்காய் அரைத்து வெங்காயம் தட்டித்தருவார்.அது தான் இந்த கூட்டாஞ்சோறுக்கு அடிப்படை ருசியை தரும்.கிட்ட தட்ட முப்பத்தைந்து வருடங்கள் முன்பு எங்கள் பால்ய விளையாட்டில் இந்த சமையலும் ஒன்றாக இருந்தது.
சரி அந்த சந்தோஷ நினைவுகளோடு இனி சமையலை கவனிப்போம்.

வீட்டில் உள்ள காய்கறிகளுள் பிடித்தமானவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இனி  சுலபமான செய்முறை:

புழுங்கல் அரிசி - 200 கிராம்
பருப்பு - 50 கிராம்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
காயகறிகள் - கால் கிலோ
முருங்கைக்கீரை - ஒரு கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு.

அரைத்த மசாலுக்கு:
தேங்காய்த் துருவல்  - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 அல்லது 3
சின்ன வெங்காயம் - 10

தாளிக்க:
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு ,உளுத்தம் பருப்பு - 1 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.
வடகம் உடைத்தது - ஒன்று
பெருங்காயம் - கால் டீஸ்பூன்.

மேலே மணத்திற்கு விட  - 1 அல்லது 2 டீஸ்பூன் நெய்.

பரிமாறும் அளவு - 3 அல்லது 4 நபர்.

முதலில் அரிசி பருப்பை நன்கு களைந்து அலசி நான்கு  கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.

தேவையான காய்கறிகளை நறுக்கி எடுக்கவும்.நான் கத்திரிக்காய் -4, முருங்கைக்காய் -1,கேரட் -1,உருளை -1 எடுத்துள்ளேன்.உங்களிடம் அவரைக்காய்,வாழைக்காய்,மாங்காய் போன்ற காய்கறிகள் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

மேற்சொன்னபடி மசாலாவை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.கீரையை ஆய்ந்து நன்கு அலசி காய்கறிகளுடன் தயாராக வைக்கவும்.

அடுப்பை பற்றவும்.குக்கரை ஏற்றி ஊற வைத்த அரிசி பருப்பு கொதி வரட்டும்

மூடி மட்டும் போட்டு அடுப்பை  சிம்மில் வைக்கவும்.

இப்படி அரிசி பருப்பு பாதி வெந்து வரும்.

அரிசி பருப்பை அடுப்பில் ஏற்றியவுடன், ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு தயாராக நறுக்கிய காய்கறிகள் வதக்கவும்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.கீரை சேர்த்து வதக்கவும்.அரைத்த மசால் சேர்க்கவும்.கொதி வரட்டும்.

காய்கறிகள்  பாதி வேக்காடு ஆனவுடன்

புளித்தண்ணீர் சேர்க்கவும்,தேவைக்கு உப்பு சேர்க்கவும்.ஒன்று சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.

வெந்த அரிசி பருப்பில் தயார் செய்த காய்கறிக்கலவை சேர்க்கவும்.

பிரட்டி விடவும்.மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.அளவாய் உப்பு சேர்க்க வேண்டும்.

எல்லாம் ஒன்று சேர்ந்து கொதி வரும்.அடுப்பை குறைத்து 7-10 நிமிடம், மூடி வெயிட் போட்டு சிம்மில் வைக்கவும்.

ஆவியடங்கியவுடன் திறக்கவும்.

ஒரு சேர பிரட்டி விடவும்.அடியில் ஒட்டாமல் இப்படி வர வேண்டும். சோறு அதிகக் குழைவாக இல்லாமலும், ஒன்றொன்றாக இல்லாமலும் பக்குவமாக  இருக்க வேண்டும்.

தாளிக்க சொன்னபடி  அடுப்பில் வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு கருவேப்பிலை வெடிக்க விடவும், வடகம் சேர்த்து பொரிய விடவும்,பெருங்காயப் பொடி சேர்க்கவும்.தாளித்ததை ரெடியான கூட்டாஞ்சோறுவில் சேர்க்கவும்.

ஒரு போல் பிரட்டி விருப்பப்பட்டால் நெய் சேர்த்து மணக்க மணக்க சூடாக பொரித்த அப்பளம்,வடகம் ,வற்றலுடன் பரிமாறவும்.

சுவையான ஆரோக்கியமான கூட்டாஞ்சோறு ரெடி.நீங்களும் செய்து அசத்துங்க.


இந்த கூட்டாஞ்சோறுவை என் மகனை உண்டாயிருந்த(மாசமாக இருந்த) சமயம் எங்கள் கடையின் கணக்குப்பிள்ளை திரு,ஆண்டியா பிள்ளை அவர்களின்  வீட்டம்மா செய்து கொண்டு வந்து தந்தாங்க, வெரைட்டியாக மற்ற கட்டுச் சாதத்துடன் பெரிய டிபன் கேரியரில் அப்பப்பா, இப்ப நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது.நிச்சயம் ஒரு முறையேனும் செய்து பாருங்க.இது முன்பே செய்து என் ஃபைலில் இருந்தது,இப்பொழுது தான் பகிர நேரம் வந்திருக்கிறது.
இக்குறிப்பை காரசாரம் ரேவா தன் ஆங்கில வலைப்பூவில் எத்தனை அழகாய் பகிர்ந்திருக்காங்க பாருங்க.நன்றி ரேவா.

இக்குறிப்பை
TST - தமிழர் சமையல் செவ்வாய்க் கிழமை இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

Show commentsOpen link

Monday 7 October 2013

veg egg roll -வெஜிடேபிள் முட்டை ரோல் tamil samayal kurippugal

veg egg roll -வெஜிடேபிள் முட்டை ரோல்

by vijivedachalam

மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு, நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து தர ஆசையா?
அப்படியானால், அதற்கு ரோல் சரியானதாக இருக்கும். அதிலும் வெஜிடேபிள் முட்டை ரோல் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் இந்த ரோலை காலையில் கூட செய்து சாப்பிடலாம். குறிப்பாக அலுவலகத்திற்கு செல்வோருக்கு ஏற்ற ரெசிபி. சரி, இப்போது அந்த வெஜிடேபிள் முட்டை ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

வெஜிடேபிள் முட்டை ரோல் தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 1
உருளைக்கிழங்கு - 1 (வட்டமாக மெல்லியதாக நறுக்கியது)
கத்திரிக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
முட்டை - 2 (அடித்துக் கொள்ளவும்)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
முட்டைகோஸ் - 2-3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தக்காளி சில்லி சாஸ் - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அதில் கத்திரிக்காயை சேர்த்து வதக்கி விட வேண்டும். கத்திரிக்காயானது நன்கு வதங்கியதும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் முட்டைகோஸ் சேர்த்து கிளறி, உப்பு சேர்த்து கிளறி, அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

பிறகு அதனை சப்பாத்தியில் வைத்து, அதன் மேல் தக்காளி சில்லி சாஸ் தூவி சுருட்டினால், அருமையான வெஜிடேபிள் முட்டை ரோல் ரெடி!!!

குறிப்பு: கத்திரிக்காய் பிடிக்காது என்றால், அதனை போடாமல் செய்யலாம். மேலும் விருப்பமான காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.


Show commentsOpen link

Saturday 5 October 2013

மிர்ச்சி கா சாலன் - Mirchi Ka Salan

மிர்ச்சி கா சாலன் / Mirchi Ka Salan

by Asiya Omar
சமைத்து அசத்தலாம்

தேவையான பொருட்கள்;
இளம் பச்சை நிற பெரிய மிளகாய் - 6
(பஜ்ஜி மிளகாயை விட சிறியது)
வெங்காயம்- 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

வறுத்து அரைக்க:
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
கெட்டி தயிர் - அரை கப்

தாளிக்க:
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - இரண்டு இணுக்கு.

செய்முறை:
 தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.


ஒரு கடாயில் வேர்க்கடலை, எள்ளு,தேங்காய் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு லேசாக சிவற வறுத்து ஆற வைக்கவும்.

 மிளகாயை நன்கு அலசி கீறிவிட்டு விதையை எடுக்கவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம், கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.



 நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவற விடவும்.

 இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

 மற்ற மசாலாக்கள் சேர்க்கவும்.வதக்கவும்.

 அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.

 ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.

 கெட்டித்தயிர் சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.அடுப்பைக் குறைக்கவும்.

 பொரித்த மிளகாய் சேர்க்கவும்.

 அடுப்பை நன்கு குறைக்கவும்.மூடி விடவும்.

 எண்ணெய் மேலெழும்பி சால்னா கெட்டியாகி வரும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான மிர்ச்சி கான் சாலன் ரெடி.இந்த மிளகாய் கிடைக்காதவர்கள் பஜ்ஜி மிளகாயில் செய்து பாருங்க.

 சூடான சாதம் ,பிரியாணி,புலாவ் வகைகளுக்கு பக்க உணவாக பரிமாறவும்.

பிரியாணிக்கு வெங்காய பச்சடி, தொட்டுக்க  தால்ச்சா அல்லது எண்ணெய் கத்திரிக்காய் பொதுவாக வைப்போம்.வித்தியாசமாக ஏதாவது சைட் டிஷ் செய்ய நினைப்பவர்கள் மாற்றமாக  இந்த மிர்ச்சி கா சாலன் வைத்து பாருங்க,சூப்பராக இருக்கும்.இது ஹைதராபாத் ஸ்பெஷல் ஆகும்.இது முன்பே என் ஆங்கில வலைப்பூவில் பகிர்ந்த குறிப்பு தான்.ஒரு சில என் ஊர் தோழிகள்,குடும்பத்தார்கள்  ஆங்கிலத்தில் கொடுத்ததை தமிழிலும் கொடுங்க என்று அன்பாக கேட்டுக் கொண்டதால் இங்கும் சில ரெசிப்பிக்கள் பகிர எண்ணியுள்ளேன்.
கருத்துக்கள் குறைவாக வந்தாலும் நான் எப்பவும் என் ட்ராஃபிக் பார்த்து திருப்தி பட்டுக் கொள்வதுண்டு.மெயில் மூலம் தொடர்பு கொண்டு,நேரில்,தொலைபேசியில்  கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் வருகை தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

Show commentsOpen link

Thursday 3 October 2013

Oriental Basil Chicken

Oriental Basil Chicken

by vijigermany
New

Oriental Basil Chicken

Ingredients

2 Tbsp garlic

3 green chillies

3 red chillies

1 tsp oil

500 gms minced chicken

2 Tbsp oyster sauce

2 Tbsp light soya sauce

A handful of basil leaves

1 Tbsp castor sugar

Method

Crush some garlic, green chillies and red chillies together.

Heat the pan with oil for few minutes.

Add the smashed garlic and chillies in the preheated pan. When garlic starts to turn brown, add the chicken and stir for a few minutes.

The juice from the chicken will eventually start coming out. Keep stirring until all the juice is
absorbed. It will take a couple of minutes.

Add oyster sauce and light soya sauce. Then add basil leaves to it.

Quickly turn it over a few times to mix the leaves with the meat and then add castor sugar to it.

Mix it well for few minutes and remove from the fire.

Serve hot.

Show commentsOpen link

மணத்தக்காளிக் குழம்பு / Manathakkali Kuzhambu

மணத்தக்காளிக் குழம்பு / Manathakkali Kuzhambu
by Omar

இந்தச் செவ்வாய் தமிழர் சமையலுக்கு என்னுடைய பகிர்வு மணத்தக்காளிக் குழம்பு. நீங்களும் ஃப்ரெஷ் மணத்தக்காளி கிடைத்தால் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்;
மணத்தக்காளி - ஒரு கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு.

தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்ப்பூன்
பெருங்காயப்பொடி - 2 பின்ச்
கருவேப்பிலை - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் - நறுக்கியது - 10

வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் -3 அல்லது 4
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2  டேபிள்ஸ்பூன்

செய்முறை:
மணத்தக்காளி காயை காம்பு நீக்கி நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைக்கவும்.

 ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வற்றல், உளுத்தம் பருப்பு,துவரம் பருப்பு,மிளகு நன்கு மணம் வரும் படி சிவற வறுக்கவும்,அத்துடன் தேங்காய் துருவலும் சேர்த்து லேசாக வதக்கவும்.


 ஆற விடவும்.

 சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விடவும்.காய்ந்து வரும் பொழுது கடுகு,கருவேப்பிலை,வெடிக்கவும் பெருங்காயம்,சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். அடுத்து சுத்தம் செய்த மனத்தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

 புளித்தண்ணீர்,தேவைக்கு  உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும், மணத்தக்காளி வெந்த பின்பு அரைத்த மசால் சேர்க்கவும்.ஒரு சேர கொதிக்கட்டும். குழம்பு கெட்டியாகும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.விரும்பினால்  சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம்.

 எண்ணெய் மேலெழும்பி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.சிறிது மூடி வைக்கவும்.

 சுவையான மணத்தக்காளி குழம்பு ரெடி.இத்துடன்சுடு  சாதம் பொரித்த அப்பளம்,கூட்டு என்று பரிமாறினால் சூப்பராக இருக்கும்.

தமிழ் நாட்டுக் கிராமங்களில் இந்த மணத்தக்காளியில் குழம்பு,கீரைக் கூட்டு, வற்றல் குழம்பு என்று பாரம்பரியமாக சமைப்பது வழக்கம். சத்து நிறைந்த இந்த மணத்தக்காளி வாய்ப்புண்,வயிற்றுப்புண்ணிற்கு  ஒரு நல்ல மருந்து.பசியைத் தூண்டும்.நீங்களும் செய்து பாருங்க.

இக்குறிப்பை
TST - தமிழர் சமையல் செவ்வாய்க் கிழமை இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.
மற்றும் இக்குறிப்பை Gayathri's Walk Through Memory Lane @ Priya's Virunthu  -விற்கும் அனுப்பி வைக்கிறேன்.

Show commentsOpen link

Tuesday 1 October 2013

Indian Chicken Recipes

10 Best Indian Chicken Recipes

by vijigermany

Amritsari Murgh Makhani
Ingredients

For the marination:

500 gm chicken pieces (boneless)

2 tsp ginger paste

2 tsp garlic paste

3 tsp sour curd

1 Tbsp lemon juice

2 tsp vinegar

1 tsp coriander powder

1 tsp cumin powder

1/2 onion, chopped

1 1/2 tsp red chilli powder

Salt to taste

For the gravy:

6 tomatoes

1 1/2 Tbsp butter

1 tsp red chilli powder

1 tsp ginger - finely chopped

1 green chilli - finely chopped

1/4 tsp orange color

2 1/2 Tbsp fresh cream

1 tsp coriander powder

1 tsp cumin powder

1 tsp sugar

Salt to taste

For garnishing:

2 green chilies - chopped

1 Tbsp butter

2 Tbsp fresh cream

Fresh coriander leaves

Method

Blend 6 tomatoes to a puree. Mix all the ingredients for marination to make a paste. Smear the chicken pieces with the paste and let it marinate for 2 hours.

Heat 1 1/2 tbsp of butter in a heavy bottom wok and add the marinated chicken to it. Cook till the chicken is tender.

In a saucepan, heat 1 1/2 tbsp butter and add red chilli powder, coriander powder, cumin powder, ginger, salt and 1 chopped green chilli.

Fry for some time. Add tomato puree, orange color, fresh cream and cook on medium flame till the puree thickens.

Add the puree to the tender chicken along with 1 tsp sugar and 1/2 tsp cream. Let it simmer for 25 minutes.

Garnish with fresh cream, finely chopped green chillies and coriander leaves.

Serve with 1 Tbsp butter.

Show commentsOpen link

Popular Posts

Popular Posts