My Blog List

Friday 17 May 2013

காரைக்குடி மீன் குழம்பு

காரைக்குடி மீன் குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
மீன் – 1 /2 கிலோ
புளி – எலுமிச்சை அளவு
பூண்டு – 15  பல்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1  1 /2 – 2  தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
அரைக்க
தேங்காய் துருவியது – 1 /4  கப்
மிளகு – 10  – 15
சீரகம் – 2  தேக்கரண்டி
கருவேப்பிலை – 2  கொத்து
தாளிக்க
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
மிளகு -  1 /2 தேக்கரண்டி
வெந்தயம் – 10
கருவேப்பிலை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் – 1 /4 கப்



செய்முறை
புளியை  1 /2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மீனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கடாயில் என்னை ஊற்றி சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2  நிமிடங்கள் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.
வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 10  நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.
குறிப்பு
மீன் குழம்பு சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
மீன் துண்டுகளை இறுதியாக குழம்பில் சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மீன் குழம்பில் கரைந்து விடும்.

Tuesday 7 May 2013

சுவையான கை முறுக்கு

சுவையான கை முறுக்கு செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு


திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள் 
  • அரிசி மாவு – 4 கப்
  • உளுத்தம் மாவு – 1/2  கப்
  • மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
  • சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
  • வெண்ணெய் / நெய் – 200 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை 
  1. உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த உளுத்தம்பருப்பை மிக்ஸ்யில் நன்கு அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
  2. இதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. நெய்யை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கையால் நன்கு தேய்த்துக் கொள்ளவும். இதனுடன் மாவு கலவையை சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும்.
  4. மாவை 3 அல்லது 4 பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்.
  5. முதலில் ஒரு பகுதி மாவை மட்டும் எடுத்து திக்காக பிசைந்து கொள்ளவும்.
  6. ஒரு ஈரத் துணியின் நடுவில் ஒரு பாட்டில் மூடியை வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சம்பழ அளவு உருண்டையை எடுத்துக் கொள்ளவும்.
  7. கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கலந்து முறுக்கினை சுற்றவும்.
  8. கட்டை விரலாலும், ஆள்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருக்கி பாட்டில் மூடியைச் சுற்றிலும் சுற்றி விடவும்.
  9. இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக் கூடாது. தேவையான அளவிற்கு சுற்றுகளின் எண்ணிக்கையை கூடவோ, குறைத்தோ சுற்றிக் கொள்ளலாம்.
  10. கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் சுற்றி வைத்துள்ள முறுக்கை கவனமாக எடுத்து, எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும்.
  11. இதே போல் அடுத்த பகுதி மாவை எடுத்து பிசைந்து, சுற்றி, பொரித்து எடுக்கவும்.
  12. சுவையான கை முறுக்கு தயார்.

Popular Posts

Popular Posts