My Blog List

Monday 10 September 2012

இறால் குழம்பு!!!




 விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது ஏதேனும் வித்தியாசமான வகையில் சாப்பிடவில்லை &#2 958;ன்றால், அந்த நாளே வேஸ்ட் என்பது போல் இருக்கும். ஆகவே அப்போது வீட்டில் ஏதேனும் செய்து சாப்பிடலாம். இப்போது இறால் குழம்பை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இறால் - 400 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (அரைத்தது)
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும&#3 021;.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும்.
பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.
பின் அதனை எடுத்து ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத&# 3021;து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும்.
பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.இப்போது சுவையான இறால&#30 21; குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Saturday 8 September 2012

காய்கறி கட்லட்



 உடல் ஆரோக்கியமாக இருக்க காய்கறிகளை தினமும் நன்கு சாப்பிட வேண்டும். ஏனெனில் அவற்றில் உடலு& #2965;்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆகவே அவற்றை எப்போதும் ஒரே விதமாக குழம்பு, பொரியல் என்று செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக கட்லட் செய்து சாப&# 3021;பிடலாம். இப்போது அந்த  காய்கறி  கட்லட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1
கார்ன் பவுடர் - 1 கரண்டி
கொத்தமல்லி - 1/2 கட்டு
மிளகாய் தூள் - 2 கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1/2 கரண்டி
கரம் மசாலா தூள் - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
முதலில் வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் லேசாக அடித்துக் கொண்டு, பின் தக்காளி மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை நன்கு மசித்துக் கொள்ளவும். பின் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை அதில் போடவும்.
பின்னர் அதில் லேசாக அடித்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, , கரம் மசாலா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து வைத்துக் க&#3018 ;ள்ளவும்.
பிறகு அதனை சிறு உருண்டைகளாக எடுத்துக் கொண்டு, சற்று தட்டையாக தட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சற்று அதிகமாக எண்ணெய் ஊற்றி, அந்த தட்டி வைத்துள்ள கலவையை முன்னும் பின்னும் பொன்னிறமாக மொறுமொறுவென வேக வைத்து எடுக்&#29 65;வும். இப்போது சுவையான காய்கறி  கட்லட் ரெடி!!!

Popular Posts

Popular Posts