My Blog List

Monday 11 November 2013

PAYANULLA SAMAYAL KURIPUGAL

 PAYANULLA SAMAYAL KURIPUGAL




1. Kothumai Maavil Uppu Serthu Lesaga Suda Vaitha Neer vittu Pisainthu
(Kettiyaga) Ithanudan Thuriviya Carrot, Beetroot, Kaali Flower,
Patchai Milagai, Vengayam Serthu Vathaki Adai Seiythal Sathana
Suvaudan Koodiya adai Redi.

2. Idly Maavil Ulunthu Pothamal Maavu Ketiyai Irunthal Patchai
Appalangalai Thaneerul Nanaithu Mixyil Pottu Oru nimidam Oda Vittu
Mavil Kalanthu Atharku Pin Idlygal Vaarthal Idly Poo Mathiri Irukum.

3. Kilangugal Seekiram Vega Venduma ? Pathu Nimidam Uppu Kalantha
Neeril Oora Vaithu Vega Vaithal Elithil Venthu Vidum .

4. Vaalaipoo, Vaalithandu Aaagiyavatrai Narukinal Udanae Avatrai Moar
Kalantha Thaneeril Pottu Vaika Vaendum. Ithanal Vaalipoo Valaith
thandin Niram Maarathu, Karaipudikathu. Thuvarpu Neengum.

5. Kothumayai Nangu Kaluvi Naangu Mani Neram Oora Vaithu Ularthi Pin
Machinil Araithu Sapathi Seiythal Migavum Miruthuvana Chapaathi
Kidaikum.

6. Thaaniyam Matrum Payaru Vagaigalai 8 Mani Neram Oora Vaithu Thaneer
Vadithu Hot Bakil Pottu Moodi Marunaal Thiranthu Paarthal Mulai
Kattiya Thaaniyam Thayaar.

7. Mysoor Paagu Moru Moruvendru Vara Venduma? Mysoor Paagu Seiuthu
Irakum pothu oru sitigai Soda Uppai Potal Pongi Varum . Appothu
Thattil Ootri Thundugal Pottal Kadayil Vangiyathu Polave irukum.

8. Urulai Kilangu Ponda Seiyvathu Pola , Ella Kaikarigalum Ondraga
Vathaki, Urutti , Kadalai Maavil Theithu Ennyil poritheduka Vegetable
Ponda Seiyalam .

9. Brediruku Jam Illai endral Kavalai Vendam. Neyai Bread Muluvathum
Thdavi Athan Meethu Thaen Thadaviya Breadai Vaithu Moodi Sapidalam.

10. Idiyappam Seithu Niraya Meenthu Vittatha? Athai oru Naal
Muluvathum Pulitha Thayiril Oora vaithu nilalil Ularthi Vatralaki
Vidungal.

Friday 25 October 2013

போன்லெஸ் கிரீன் ஃபிஷ் ஃப்ரை - Boneless Green Fish Fry

போன்லெஸ் கிரீன் ஃபிஷ் ஃப்ரை - Boneless Green Fish Fry

 தேவையான பொருட்கள்;
ஃப்ரெஷ் ஃபிஷ் போன்லெஸ் - 1 கிலோ
தேவைக்கு மஞ்சள் தூள் ,
மற்றும் உப்பு
நன்கு கழுவி எடுத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.

 அரைக்க:
பச்சை மிளகாய் - 6
மல்லி இலை - 2 கைப்பிடி
புதினா இலை - 1 ஒரு கைப்பிடி
விரும்பினால் கருவேப்பிலை
சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
பொரிக்க தேவைக்கு எண்ணெய் .

 அரைத்த விழுதை ஒரு ப்லேட்டில் எடுத்து 
அத்துடன் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,
2 டீஸ்பூன் மிளகுத்தூள்,
ஒரு டீஸ்பூன் சீரகத்தூள்,
ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள்,
கால் அல்லது அரைடீஸ்பூன் கரம் மசாலா,
தேவைக்கு எலுமிச்சை ஜூஸ்(பெரிய பழம் )
ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்,
உப்பு சிறிது சேர்த்து விரவி வைக்கவும்.

 விரவிய மசாலாவை ஒவ்வொரு துண்டாக எடுத்து தடவி வைக்கவும்.

 ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் நிச்சயம் ஊற வேண்டும் அல்லது ஒரு நாள் முழுவதும் வைத்தாலும் சரி.

விரவிய மீனை பிரட்ட
மைதா, கார்ன்ஃப்லோர்,ப்ரெட் கிரம்ஸ் தலா 2 டேபிள்ஸ்பூன்,சிறிது உப்பு கலந்து வைக்கவும்.

 ஊறிய மீனை லேசாக மாவில் பிரட்டி எடுக்கவும்.( நான் எப்பவும்,மைதா,கார்ன்ஃப்லோர், ப்ரெட் கிரம்ஸ் சம அளவு போட்டு மிக்ஸ் செய்து ஒரு பாக்சில் வைத்திருப்பேன்)

 தவாவில் தேவைக்கு எண்ணெய் விட்டு சாலோ ஃப்ரை செய்து எடுக்கவும்.

 நெருப்பு சரியான சூட்டில் வைத்து பதமாக இரு புறமும் சிவற வைத்து பொரித்து எடுக்க வேண்டும்.

சூப்பர் சுவையுள்ள ஆரோக்கியமான ஃபிஷ் ஃப்ரை ரெடி.
வித்தியாசமாக ஃபிஷ் ஃப்ரை செய்ய நினைத்தால் இதை செய்து பாருங்க.உப்பு காரம் அளவாய் இருக்க வேண்டும்.

shared via

Tuesday 22 October 2013

பூண்டு சட்னி - Garlic Chutney

பூண்டு சட்னி - Garlic Chutney

இந்த வார என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்;
பூண்டு - 6-8 பற்கள்(பெரிய பற்கள்)
மிளகாய் வற்றல் - 2
பெரிய தக்காளி - 1
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு இணுக்கு.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்.

 பூண்டு பற்களைத் தோல் உரித்து வைக்கவும்.மிளகாய் வற்றலை சுட்டோ லேசாக எண்ணெயில் பொரித்தோ எடுக்கவும்.தாளிக்க வைத்துள்ள எண்ணெயிலேயே பொரித்து எடுக்கலாம்.

சிறிய மிக்ஸி ஜாரில்  பூண்டு,வற்றல், உப்பு போட்டு முதலில் அரைக்கவும்.

 பின்பு அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

 நன்கு அரைத்து எடுக்கவும்.

 கடாயில் எண்ணெய் விடவும், சூடானவுடன் கடுகு கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.

 அரைத்த சட்னியை சேர்க்கவும். பச்சை வாடை போகும் வரை அடுப்பை மீடியமாக வைத்து நன்கு வதக்கவும்.

 இப்படி சட்னி வற்றி தொக்கு போல் ஆகும் அடுப்பை அணைக்கவும்.தக்காளி,பூண்டின் பச்சை வாடை சுத்தமாகப் போய் மணமாக இருக்கும்.

சுவையான சத்தான பூண்டு சட்னி  ரெடி.
இட்லி தோசையுடன் பரிமாறவும்.காரசாரமாக இருக்கும்.

shared via

Sunday 20 October 2013

கோதுமை கேரட் அல்வா kothumai kerat alwa

கோதுமை கேரட் அல்வா

தேவையானப்பொருட்கள்:

கோதுமை மாவு - 1/2 கப்
கேரட் (நடுத்தர அளவு) - 2
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது

செய்முறை:

கேரட்டை கழுவி, தோலை சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.  வெட்டிய கேரட் துண்டுகளை சிறிது நீர் சேர்த்து வேக விட்டு, சற்று ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் நெய்யை விட்டு, அதில் கோதுமை மாவை போட்டு, மிதமான தீயில் நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்.  பின்னர் அத்துடன் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சர்க்கரையையும் சேர்த்து கை விடாமல் கிளறவும்.  சர்க்கரை நன்றாகக் கலந்து, அல்வா கெட்டியாக  பந்து போல்  பாத்திரத்தில் ஒட்டாமல்   வரும் பொழுது, ஏலக்காய் தூளைச் சேர்த்துக் கிளறி, தேவைப்பட்டால், மேலும் சிறிது  நெய்யையும் ஊற்றிக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்திலோ, தட்டிலோ கொட்டிப் பரப்பி விடவும்.  முந்திரியை சிறிய துண்டுகளாக்கி, அல்வாவின் மேல் தூவி விடவும்.

கவனிக்க:  இனிப்பு அதிகம் தேவையென்றால், சர்க்கரையின் அளவை சிறிது கூட்டிக் கொள்ளவும்.

shared via

Friday 18 October 2013

பண்டிகை வடை pandikai vadai

பண்டிகை வடை pandikai vadai

பண்டிகை நாட்களில், சிலர் வீடுகளில் வெங்காயம், சோம்பு போன்ற மசாலாப் பொருட்களை சமையலில் சேர்க்க மாட்டார்கள். இப்படி வெங்காயம், சோம்பு சேர்க்காமல் செய்யப்படும் வடையை "பண்டிகை வடை" என்று அழைப்பார்கள்.

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 3/4 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

பருப்புகள் மூன்றையும் ஒன்றாகப் போட்டு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.  பின்னர் நன்றாகக் கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து, மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

இஞ்சி, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும்.  சீரகத்தையும் மாவில் போட்டு நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.  எண்ணை காய்ந்ததும், எலுமிச்ச அளவு மாவை எடுத்து வடையாகத் தட்டி, நடுவில் துளையிட்டு, எண்ணையில் போட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.

shared via

Tuesday 15 October 2013

How to Buy Vegetables! - காய்கறி வாங்க தெரியுமா?

How to Buy Vegetables! - காய்கறி வாங்க தெரியுமா?

by tnkesaven
New

தக்காளி

சிலர் செக்கச் செவேலென சிவந்து, கனிந்திருக்கிற

தக்காளிப் பழங்களைத்தான் தேடுவார்கள்.

முழுவதுமாக சிவந்திருக்கும் தக்காளிச் சாறில் அமிலம்

கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

அதனால் பச்சையும் மஞ்சளும் கலந்து செங்காயாக

இருக்கும் காய்களுக்கு முதலிடம் கொடுங்கள்.

உருண்டையாக கெட்டியாக இருக்கும் காய்களாகப்

பார்த்து வாங்குங்கள்.

முண்டும் முடிச்சுமாக இருந்தால் அதில் சாறு

அதிகமாக இருக்குமே தவிர சதைப்பற்று இருக்காது.

வெண்டைக்காய்
வெள்ளையும் இளமஞ்சளும் கலந்து மயக்கும்

வெண்ண்டைக்காயை விட பச்சைப்பசேலென

மினுக்கும் காய்கள்தான் சிறந்தவை.

வெண்டைக்காய் காம்புப் பகுதியில் இருந்துதான்

முற்றத் துவங்கும்.

எனவே காம்பை உடைத்துப் பார்த்து வாங்கலாம்.

உருளை
முளைவிட்ட காய்களையும் ஆங்காங்கே பச்சை நிறம்

பூசியிருக்கும் காய்களையும் ஒதுக்குவது நல்லது.

செம்மண்ணில் விளைந்த உருளையில் இனிப்புச்சுவை மிகுந்து இருக்கும்.

கத்தரி
தடித்த காம்புள்ள கத்தரிதான் பிஞ்சு.

காம்பு மெலிந்திருந்தாலோ, காயை அழுத்திப் பார்த்தால்

கெட்டிப்பட்டிருந்தாலோ அவற்றை மறுத்துவிடுங்கள்.

சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் அதனுடன்

நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்க்கும் உத்தி ஊரறிந்த

ரகசியம். ஆனால் உருளைக்கிழங்குக்குப் பதில் சோயா

உருண்டைகளை வேகவைத்துச் சேர்ப்பதும் கைமேல்

பலன் தரும்.

சோற்று உருண்டையைப் போட்டாலும் உப்பு குறைய

வாய்ப்பு இருக்கிறது.
டீ போடும்போது கடைசியில் சர்க்கரை சேர்ப்பதுதான்

வழக்கம். இதையே தலைகீழாக முயற்சிக்கலாம்.

முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரை சேர்த்து

கொதிக்க விடுங்கள்.

பிறகு டீத்தூள் சேர்த்து வடிகட்டி,

சூடான பால் சேர்த்துப் பாருங்கள். டீ திடமாகவும்,

சுவையாகவும் இருக்கும்.

இதில் இன்னொரு நல்லதும் இருக்கிறது.

இப்படி முதலிலேயே சர்க்கரை சேர்ப்பதால் டீத்தூளின்

கரை பாத்திரத்தில் ஒட்டாது,

பாத்திரத்தைக் கழுவுவது எளிது!

வெண்ணெய் காய்ச்சும்போது கறிவேப்பிலை அல்லது முருங்கை இலையைப் போட்டு காப்ச்சுவதுதான் வழக்கம். அதற்குப் பதிலாக

வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது ஒரு ஸ்பூன்

வெந்தயத்தை போடுங்கள்.

நெய் அருமையான மணத்துடன் இருப்பதுடன்,

கசக்கவும் செய்யாது

courtesy;''the indhu''

Show commentsOpen link

Monday 14 October 2013

Choco Wafers Chocolate Recipe

Choco Wafers is a recipe easy and quick to make. It is such a simple chocolate recipe that you can make it at home without any problems. If you are looking for a chocolate dessert recipe that will be mouth watering but not take too much effort, then go for Choco Wafers. This simple chocolate recipe can be prepared at very short notice and almost without any preparations in advance.

People are often reluctant to try out new recipes because the long list of exotic ingredients takes a lot of time and effort to assemble. The ingredients of the Choco Wafers recipe are available universally as it requires no specifically local products. So no water where in the world you are situated, you can try this chocolate recipe without hesitation.

Choco Wafers does not demand that you know too many complicated skills from the cook book. The only trick in making Choco Wafers is to do it fast. You have to use your hands quickly to prevent the wafers from getting sodden by the chocolate.

Ingredients for Choco Wafers Recipe:
1. 2 large bars of milk chocolate, it could be any brand as long it is plain mild chocolate without any flavors.
2. Milk 100 ml
3. Dry Fruits- Raisins and nuts (chopped finely)
4. Butter 2 tablespoon
5. 10 Wafer biscuits
6. Vanilla ice cream 1 bar
7. Home foil
8. Refrigerator with ice box

Procedure for Choco Wafers:

Heat a shallow pan on high flame for 3 minutes.
Melt the two bars of milk chocolate in it gradually. Let it melt but not burn.
When you feel that the chocolate is sufficiently liquified, start adding milk.
Stir in the milk very gradually giving it ample time to mix with the molten chocolate. How much milk you add will depend on your taste.
Now let this caramel-like liquid simmer for some time until it starts to thicken.
Add the chopped dry fruits and mix it well.
Now, place sheet of aluminum foil on the kitchen slab; it should be proportional to the number of wafers you are using.
Dip the wafers one by one in the molten chocolate and place them one after the other on the foil in a standing position. You may have to ask someone to support the wafers in a standing position while you dip them.
Pour the remaining chocolate on this cylindrical formation of wafers and wrap the foil around it.
Refrigerate in the chiller for at least one hour.
Serve it cold as a dessert with scoops of vanilla ice cream.

This Choco Wafers recipe could the answer to your tension about making a 'special' dessert every time you have house guests. This chocolate recipe could also be a great surprise idea for a romantic evening.

Saturday 12 October 2013

பழுத்த மிளகாய் பூண்டு கோழி வறுவல் ரெட் சில்லி கார்லிக் சிக்கன் ஃப்ரை Cayenne Pepper Garlic Chicken Fry Red Chilli Garlic Chicken Fry

பழுத்த மிளகாய் பூண்டு கோழி வறுவல் / ரெட் சில்லி கார்லிக் சிக்கன் ஃப்ரை / Cayenne Pepper Garlic Chicken Fry / Red Chilli Garlic Chicken Fry

by Asiya Omar
சமைத்து அசத்தலாம்

கோழியை எப்படி சமைத்தாலும்  ருசியாகத்தான் இருக்கும். அதிலும் ஃப்ரை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.ஒரே மாதிரி ஃப்ரை செய்தாலும் கொஞ்சம் சலித்து விடும் தான்.ஒரு மாற்றமாக பழுத்த மிளகாய்,பூண்டு சேர்த்து செய்த கோழி வறுவல் எப்படி என்று பார்ப்போம்.எண்ணெயும் குறைவாகவே செல்லும்.

தேவையான பொருட்கள்;
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 300  கிராம்
பழுத்த சிவப்பு மிளகாய் - 4-5 (காரம் அவரவர் விருப்பம்)
பூண்டு - 6 பல்
மீடியம் சைஸ் வெங்காயம் - 1
மீடியம் சைஸ் - தக்காளி - 1
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
விரும்பினால் - ரெட் கலர் - பின்ச்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லி ,கருவேப்பிலை சிறிது.

செய்முறை:

 பழுத்த மிளகாய், தக்காளி,வெங்காயம்,பூண்டு,கெட்டி தயிர்,சேர்த்து மிக்ஸியில் கவனமாக அரைத்து எடுக்கவும்.

 சிக்கனை சிறு துண்டுகளாக்கி நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.

சிக்கனுடன்  அரைத்த விழுது,தேவைக்கு சிறிது  உப்பு,கலர் சேர்க்கவும்.

 நன்கு விரவி ஒரு மணி நேரமாவது ஊற வைக்கவும்.

 அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊறிய சிக்கனை போட்டு மூடி 15 நிமிடம் வேக விடவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது. சிக்கனிலேயே தண்ணீர் ஊறும். தண்ணீர் நன்கு வற்ற வைக்கவும்.




 கடாயில் எண்ணெய் விடவும் நன்கு சூடானவுடன் கருவேப்பிலை போடவும்,வெந்த சிக்கன் சேர்க்கவும்.நன்கு பிரட்டி பிரட்டி  விடவும்.


 சிக்கனில் மசாலா எல்லாம் ஓட்டிக் கொண்டு ஃப்ரை ஆகி வரும்.

 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும். பிரட்டி விட்டு பரிமாறவும்.

சூப்பர் சுவையுள்ள ரெட் சில்லி கார்லிக் சிக்கன் ஃப்ரை ரெடி.

ரைஸ் வகைகளுக்கு பக்க உணவாக சாப்பிடலாம்.சப்பாத்தியில் ரோல் செய்தும், ப்ரெட் சாண்ட்விச்சில் வைத்தும்  மற்றும் வெறும் ஸ்டார்டராகவும் கூட  பரிமாறலாம்.இதனையே எலும்புடன் கூடிய சிக்கன் என்றால் கொஞ்சம் கிரேவி மாதிரியும் செய்யலாம்.அதற்கு தக்காளி,வெங்காயம்,தயிர் அளவை கூட்டிக் கொள்ள வேண்டும். விரும்பினால் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கலாம்.கிரேவி செய்முறை செய்த பின்பு படம் இணைக்கிறேன்.

Show commentsOpen link

Thursday 10 October 2013

Navratri special: Faraali Idli Sambhar

Navratri special: Faraali Idli Sambhar

by Agencies

The famous southie snack can be converted into a healthy and delicious faraal snack by making the idlis with sanwa millet and the sambhar with boiled vegetable purée. Serve with peanut curd chutney for an added dash of innovativeness.

Soaking time:  8 hours
Preparation Time: 20 mins
Cooking Time: 40 mins
Makes 4 servings

Ingredients

For the idli

1 cup sanwa millet (sama)
1/2 cup sago (sabudana)
1 cup fresh curds (dahi)
4 tsp ginger-green chilli paste
rock salt (sendha namak) to taste
1 tsp oil
1 tsp cumin seeds (jeera)
1 cup boiled and peeled potato cubes
2 tsp sugar
1 tsp lemon juice
1/2 cup roasted peanut powder (optional)

For the sambhar

5 tsp coriander (dhania) seeds
4 round red chillies (boriya mirch)
2 tbsp roasted peanuts
1 tbsp grated dry coconut (kopra)
25 mm (1") piece cinnamon (dalchini)
1 1/2 cups bottle gourd (doodhi / lauki) cubes
1 1/2 cups peeled and chopped yam (suran)
1 cup peeled and chopped potatoes
rock salt (sendha namak) to taste
2 tsp oil
1 tsp cumin seeds (jeera)
1 tsp lemon juice

For the chutney

1 cup roasted and coarsely powdered peanuts
3/4 cup fresh curds (dahi)
1 1/2 tsp ginger-green chill paste
1 tbsp sugar
1/2 tbsp lemon juice
Rock salt (sendha namak) to taste

Method 
 
For the idli
Clean and wash the sanwa millet and sago.
Drain, add the curds, 2 tsp of ginger-green chilli paste, rock salt and 3 tbsp water and mix well.
Keep aside to soak for at least 6 to 8 hours.
Grind the mixture in a blender to a smooth batter without adding any water. Keep aside.
For the stuffing, heat the oil in a non-stick kadhai and add the cumin seeds.
When the seeds crackle, add the remaining 2 tsp of ginger-green chilli paste and sauté on a medium flame for a few seconds.
Add the potatoes, sugar, lemon juice and rock salt, mix well and cook on a slow flame for 5 minutes.
Cool and divide the stuffing into 16 equal portions.
Put 1 tbsp of the idli batter into greased idli moulds, spread a portion of the potato stuffing over it.
Sprinkle a little peanut powder over it and top it up with another tbsp of the idli batter.
Steam in an idli steamer for 10 minutes or till done.
For the sambhar

Combine the coriander seeds, 2 round red chillies, peanuts, dry coconut and cinnamon and blend in a mixer to a fine powder. Keep aside.
Boil a vesselful of water, add 1 cup of bottle gourd, 1 cup of yam and potatoes and cook for 8 to 10 minutes or till the vegetables are completely cooked.
Drain, cool and blend in a mixer to a smooth purée.
Transfer it to a deep non-stick pan, add 4 cups of water, mix well and simmer for 7 to 8 minutes, while stirring once in between.
Add the remaining ½ cup of bottle gourd and yam, ground powder and rock salt, mix well and cook for 3 to 4 minutes.
For the tempering, heat the oil in a small non-stick pan and add the cumin seeds.
When the seeds crackle, add the remaining 2 round red chillies and sauté for a few seconds.
Pour the tempering over the boiling sambhar, mix well and simmer for another 3 to 4 minutes.
Add the lemon juice and mix well.
For the chutney

Combine all the ingredients and blend in a mixer till smooth.
Store refrigerated in an air-tight container and use as required.
How to serve

Serve hot idlis with sambhar and peanut curd chutney.
Here is the original recipe source: Faraali Idli Sambhar by Tarla Dalal

Show commentsOpen link

Wednesday 9 October 2013

போன்லெஸ் சிக்கன் மந்தி - Boneless Chicken Mandi

போன்லெஸ் சிக்கன் மந்தி / Boneless Chicken Mandi

by Asiya Omar
சமைத்து அசத்தலாம்Today,

அரபு நாடுகளில் எப்படி சவர்மா, பார்பிகியூ பிரசித்தமோ அதே போல் இந்த மந்தி ரைஸ், கப்ஸா ரைஸ் போன்றவையும் மிகப் பிரபலம்.ஏற்கனவே நான் சிக்கன் கப்ஸா ரைஸ் , மட்டன் கப்ஸா குறிப்பை என் அரேபிய உணவுகள் பகுதிகளில் பகிர்ந்திருக்கேன்.
நம் நாட்டில் பிரியாணி போல் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த மந்தி ரைஸ் பிரபலம்.நாம் இங்கு நிறைய மசாலா எல்லாம் சேர்த்து பிரியாணி செய்கிறோம்.ஆனால் அரபு நாடுகளில் காரம் ,மசாலா அதிகம் இல்லாமல் மைல்டாக ஆரோக்கியமாக செய்து சாப்பிடுவது வழக்கம்.
சிக்கன், மட்டன், மீன் என்று எல்லாவற்றிலும் இதனை வெரைட்டியாக செய்யலாம்.முழுக் கோழியை பாதியாக வெட்டி தோலோடு கிரில் செய்தோ அல்லது அரிசியுடன் வெந்தோ இந்த மந்தி ரைஸ் செய்வார்கள்

இப்ப சிக்கன் மந்தி சிம்பிளாக எப்படி செய்வதுன்னு பார்ப்போம்.
நான் இங்கு ஒரு மாற்றமாக எலும்பில்லாத சிக்கனை பேக் செய்து   மந்தி ரைஸ் செய்திருக்கேன்.
மந்தி ரைஸ்க்கு தேவையான பொருட்கள்;
எலும்பில்லாத சிக்கன் நெஞ்சுப்பகுதி - 800 கிராம்.
பாசுமதி அரிசி - அரைக்கிலோ
எண்ணெய் நெய் - 50+ 50 (100 மில்லி)
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 (100 கிராம்)
பட்டை  -2 துண்டு,
கிராம்பு, ஏலக்காய்  - தலா 4
(விருப்பப்பட்டால் தாளிக்க சிறிது முழு மிளகு,சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்)
காய்ந்த எலுமிச்சை - 1 அல்லது இரண்டு
knorr ஆல் ஸ்பைஸ் மிக்ஸ்(சிறிய பேக் 2 ) அல்லது சிக்கன் ஸ்டாக் - 2
உப்பு  சேர்க்க வேண்டாம், இவற்றிலேயே உப்பு இருக்கும்.நான் இங்கு knorr ஆல் இன் ஒன் ஸ்பைஸ் சேர்த்து செய்தேன்.
பால் - 50 மில்லி, 2 பின்ச் சாஃப்ரான்.
அலங்கரிக்க:
எண்ணெயில் வறுத்த முந்திரி,காய்ந்த திராட்சை,சிவற வறுத்த  வெங்காயம் ரெடி செய்து கொள்ளவும்.

தேவையான பொருட்களை இப்படி முதலியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் அளவு - 4 நபர்கள்.

இனி சிக்கன் பேக் செய்வதற்கு எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

 கோழி நெஞ்சுப் பகுதியை நன்கு சுத்தம் செய்து அலசி தண்ணீர் நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும்.

 800 கிராம் சிக்கனுக்கு சிக்கன்  பார்பிகியூ மசாலா 4 டீஸ்பூன்,2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு எலுமிச்சை ஜூஸ், 1 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு விரவி வைக்கவும்.பார்பிகியூ மசாலா இல்லாதவர்கள் 2 டீஸ்பூன் சில்லி பவுடர் மட்டும் கூட உபயோகிக்கலாம்.

 சிக்கனை பேக் செய்ய ஒரு நான்ஸ்டிக் பேக்கிங் ட்ரேயில் ஆலிவ் ஆயில் ஒரு டேபிள்ஸ்பூன் தடவி ரெடி செய்த சிக்கன் துண்டுகளை வைக்கவும்.

 முற்சூடு செய்த எலெக்ட்ரிக் ஓவனில் 250 டிகிரிக்கு செட் செய்து பேக் செய்ய வேண்டும்.அனலை மேலும் கீழும் செட் செய்ய வேண்டும்.சிக்கன் வைத்த ட்ரேயை ஓவனில் வைத்து இருபது நிமிடம் கழித்து திற்ந்து பார்க்கவும்.

 சிக்கன் துண்டுகள் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி மறுபுறம் வைக்கவும்.

 ஓவனுக்கு ஓவன் செய்முறைக்கு தகுந்த படி நேரம் மாறுபடும்.உங்கள் பக்குவப் படி பேக் செய்து எடுக்கவும். தோலோடு சிக்கன் உபயோகித்தால் வைத்தால் கிரில் ப்லேட் வைத்து கிரில் செய்து எடுக்கலாம்.

 சிக்கன் நன்கு வெந்த பிறகு கவனமாக கையுறை போட்டு வெளியே எடுக்கவும்.

இனி மந்தி ரைஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும். பட்டை,கிராம்பு,ஏலக்காய் போடவும்.லேசாக வெடிக்க ஆரம்பிக்கும்.(விருப்பப்பட்டால் தாளிக்க சிறிது முழு மிளகு,சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்)

நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

 நன்கு வதக்கவும் லேசாக சிவறட்டும்.

 இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வதக்கவும்.

 ஊறிய அரிசி சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

 அரிசியின் அளவிற்கு இரண்டு அளவு தண்ணீர் வைக்கவும்.காய்ந்த எலுமிச்சையை ஃபோர்க்கால் துளை செய்து போடவும்.knorr ஆல் ஸ்பைஸ் சேர்க்கவும்( 2 அல்லது 3டீஸ்பூன்) உப்பு சேர்க்கவில்லை.அதுவே அதிக உப்பு கரிப்புடன் இருக்கும்.

 அரிசி ஒரு சேர கொதித்து முக்கால் வேக்காடு வெந்து வரும் பொழுது தயாராக உள்ள பேக்ட் சிக்கனை மேலே பரத்தி வைக்கவும்.

50 மில்லி சூடு பாலில் 2 பின்ச் சாஃப்ரான் போட்டு காய்ச்சி வைக்கவும்.ஒரு அடுப்பு கறி துண்டை அடுப்பில் கங்காக தயார் செய்யவும்.

 சாஃப்ரான் மில்க்கை தயார் செய்து வைத்த மந்தி சோற்றின் மீது ஊற்றவும்.ஒரு சிறிய தட்டில் அனலாக இருக்கும் கங்கை வைக்கவும். அடுப்புக்கரி மணம் மந்தி ரைஸில் பரவும்.

 அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி சிம்மில் கால் மணி நேரம் வைக்கவும்.அடுப்பை அணைக்கவும்.

 மீண்டும் கால் மணி நேரம் கழித்து திறந்து நன்கு பிரட்டி பரிமாறவும்.

 வறுத்த வெங்காயம் முந்திரி திராட்சை அலங்கரித்து ஒரு பெரிய சகன் (பவுல்)அல்லது ப்லேட்டில் பரிமாறவும்.

சுவையான சிக்கன் மந்தி ரெடி.

இதற்கு பக்க உணவாக ஃப்ரெஷ் கிரீன் சாலட், ஃப்ரெஷ் தக்காளி வெங்காய சட்னி தான் காம்பினேஷன்.

என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு இது. இந்த மந்தி ரைஸில் இந்த சாலட்டை போட்டு கொஞ்சம் அந்த தக்காளி வெங்காய சட்னி சிக்கன் மிக்ஸ் செய்து எல்லாம் கலந்து சாப்பிடுவதுண்டு.சும்மா மிக்ஸ் செய்யாமல் தனித்தனியாகவும் சாப்பிடலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்க. எப்பவும் மந்தி ரைஸ் விடுமுறை நாட்களில் வெளியே வாங்கி விடுவதுண்டு. எங்க பக்கம் 20 திர்ஹமுக்கு சூப்பர் மந்தி ரைஸ் கிடைக்கும் மூன்று பேர் சாப்பிடலாம்.ஆனால் உங்கள் எல்லோருக்காகவும் செய்து பகிர வேண்டும் என்பதாலேயே இந்த ரெசிப்பி பகிர்வு. அல்ஹம்துலில்லாஹ்!

Show commentsOpen link

Tuesday 8 October 2013

கூட்டாஞ்சோறு / Kootanchoru

கூட்டாஞ்சோறு / Kootanchoru

by Santhi
சமைத்து அசத்தலாம் samayal kurippugal

நெல்லை கிராமப்புறங்களில் பாரம்பரிய உணவான  இந்த கூட்டாஞ்சோறு மிகவும் பிரசித்தமானது.அதனை எப்படி இலகுவாக செய்வது என்று இந்த வார தமிழர் சமையலில் பார்ப்போம்.

நாட்டுக்காய்கறிகள்,கீரை,அரிசி,பருப்பு, அரைத்த மசால் என்று கூட்டாக சேர்த்து சமைத்து அசத்துவது  தான் கூட்டாஞ்சோறு .

மலரும் நினவுகள்...35 வருடம்  பின்னோக்கி செல்கிறேன்.

இந்த கூட்டாஞ்சோறு எங்கள் சிறு வயதின் விளையாட்டு சமையலில் இடம் பெற்ற ஒரே உணவு. வட்டாரத்தில் தோழிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து  சமைத்து சாப்பிடுவோம். எப்பொழுதும் மூடி கிடக்கும் எங்கள் பழைய வீட்டை திறந்து விடுமுறை நாட்களில் நாங்களே அடுப்பு பற்றி ஆளுக்கொரு பொருளாய் கொண்டு வந்து சமைத்து உண்டோம் எனபதை நினைக்கும் பொழுது இப்பொழுது ஆச்சரியமாகத்தான் உள்ளது.அந்த வீட்டில், கருவேப்பிலை,தென்னை,முருங்கை மரம் பின்பக்கம் இருக்கும், திறந்த வெளியில் விறகு அடுப்பு பற்றி, ஒரே பானையில் சமைத்து உண்ட அந்தக்காலம் எல்லாம் இனி திரும்ப வரவா போகிறது ?

எங்கள் தெருவில் சுளுக்கு தடவும் ஒரு வைத்தியர் இருக்கிறார்.அவர் வீட்டில் வயதான பெத்தம்மா ஒருவர் இருந்தார். அவர் அம்மியில் மஞ்சள்,சீரகம், மிளகாய் வற்றல்,தேங்காய் அரைத்து வெங்காயம் தட்டித்தருவார்.அது தான் இந்த கூட்டாஞ்சோறுக்கு அடிப்படை ருசியை தரும்.கிட்ட தட்ட முப்பத்தைந்து வருடங்கள் முன்பு எங்கள் பால்ய விளையாட்டில் இந்த சமையலும் ஒன்றாக இருந்தது.
சரி அந்த சந்தோஷ நினைவுகளோடு இனி சமையலை கவனிப்போம்.

வீட்டில் உள்ள காய்கறிகளுள் பிடித்தமானவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இனி  சுலபமான செய்முறை:

புழுங்கல் அரிசி - 200 கிராம்
பருப்பு - 50 கிராம்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
காயகறிகள் - கால் கிலோ
முருங்கைக்கீரை - ஒரு கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு.

அரைத்த மசாலுக்கு:
தேங்காய்த் துருவல்  - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 அல்லது 3
சின்ன வெங்காயம் - 10

தாளிக்க:
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு ,உளுத்தம் பருப்பு - 1 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.
வடகம் உடைத்தது - ஒன்று
பெருங்காயம் - கால் டீஸ்பூன்.

மேலே மணத்திற்கு விட  - 1 அல்லது 2 டீஸ்பூன் நெய்.

பரிமாறும் அளவு - 3 அல்லது 4 நபர்.

முதலில் அரிசி பருப்பை நன்கு களைந்து அலசி நான்கு  கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.

தேவையான காய்கறிகளை நறுக்கி எடுக்கவும்.நான் கத்திரிக்காய் -4, முருங்கைக்காய் -1,கேரட் -1,உருளை -1 எடுத்துள்ளேன்.உங்களிடம் அவரைக்காய்,வாழைக்காய்,மாங்காய் போன்ற காய்கறிகள் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

மேற்சொன்னபடி மசாலாவை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.கீரையை ஆய்ந்து நன்கு அலசி காய்கறிகளுடன் தயாராக வைக்கவும்.

அடுப்பை பற்றவும்.குக்கரை ஏற்றி ஊற வைத்த அரிசி பருப்பு கொதி வரட்டும்

மூடி மட்டும் போட்டு அடுப்பை  சிம்மில் வைக்கவும்.

இப்படி அரிசி பருப்பு பாதி வெந்து வரும்.

அரிசி பருப்பை அடுப்பில் ஏற்றியவுடன், ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு தயாராக நறுக்கிய காய்கறிகள் வதக்கவும்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.கீரை சேர்த்து வதக்கவும்.அரைத்த மசால் சேர்க்கவும்.கொதி வரட்டும்.

காய்கறிகள்  பாதி வேக்காடு ஆனவுடன்

புளித்தண்ணீர் சேர்க்கவும்,தேவைக்கு உப்பு சேர்க்கவும்.ஒன்று சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.

வெந்த அரிசி பருப்பில் தயார் செய்த காய்கறிக்கலவை சேர்க்கவும்.

பிரட்டி விடவும்.மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.அளவாய் உப்பு சேர்க்க வேண்டும்.

எல்லாம் ஒன்று சேர்ந்து கொதி வரும்.அடுப்பை குறைத்து 7-10 நிமிடம், மூடி வெயிட் போட்டு சிம்மில் வைக்கவும்.

ஆவியடங்கியவுடன் திறக்கவும்.

ஒரு சேர பிரட்டி விடவும்.அடியில் ஒட்டாமல் இப்படி வர வேண்டும். சோறு அதிகக் குழைவாக இல்லாமலும், ஒன்றொன்றாக இல்லாமலும் பக்குவமாக  இருக்க வேண்டும்.

தாளிக்க சொன்னபடி  அடுப்பில் வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு கருவேப்பிலை வெடிக்க விடவும், வடகம் சேர்த்து பொரிய விடவும்,பெருங்காயப் பொடி சேர்க்கவும்.தாளித்ததை ரெடியான கூட்டாஞ்சோறுவில் சேர்க்கவும்.

ஒரு போல் பிரட்டி விருப்பப்பட்டால் நெய் சேர்த்து மணக்க மணக்க சூடாக பொரித்த அப்பளம்,வடகம் ,வற்றலுடன் பரிமாறவும்.

சுவையான ஆரோக்கியமான கூட்டாஞ்சோறு ரெடி.நீங்களும் செய்து அசத்துங்க.


இந்த கூட்டாஞ்சோறுவை என் மகனை உண்டாயிருந்த(மாசமாக இருந்த) சமயம் எங்கள் கடையின் கணக்குப்பிள்ளை திரு,ஆண்டியா பிள்ளை அவர்களின்  வீட்டம்மா செய்து கொண்டு வந்து தந்தாங்க, வெரைட்டியாக மற்ற கட்டுச் சாதத்துடன் பெரிய டிபன் கேரியரில் அப்பப்பா, இப்ப நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது.நிச்சயம் ஒரு முறையேனும் செய்து பாருங்க.இது முன்பே செய்து என் ஃபைலில் இருந்தது,இப்பொழுது தான் பகிர நேரம் வந்திருக்கிறது.
இக்குறிப்பை காரசாரம் ரேவா தன் ஆங்கில வலைப்பூவில் எத்தனை அழகாய் பகிர்ந்திருக்காங்க பாருங்க.நன்றி ரேவா.

இக்குறிப்பை
TST - தமிழர் சமையல் செவ்வாய்க் கிழமை இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

Show commentsOpen link

Monday 7 October 2013

veg egg roll -வெஜிடேபிள் முட்டை ரோல் tamil samayal kurippugal

veg egg roll -வெஜிடேபிள் முட்டை ரோல்

by vijivedachalam

மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு, நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து தர ஆசையா?
அப்படியானால், அதற்கு ரோல் சரியானதாக இருக்கும். அதிலும் வெஜிடேபிள் முட்டை ரோல் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் இந்த ரோலை காலையில் கூட செய்து சாப்பிடலாம். குறிப்பாக அலுவலகத்திற்கு செல்வோருக்கு ஏற்ற ரெசிபி. சரி, இப்போது அந்த வெஜிடேபிள் முட்டை ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

வெஜிடேபிள் முட்டை ரோல் தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 1
உருளைக்கிழங்கு - 1 (வட்டமாக மெல்லியதாக நறுக்கியது)
கத்திரிக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
முட்டை - 2 (அடித்துக் கொள்ளவும்)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
முட்டைகோஸ் - 2-3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தக்காளி சில்லி சாஸ் - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அதில் கத்திரிக்காயை சேர்த்து வதக்கி விட வேண்டும். கத்திரிக்காயானது நன்கு வதங்கியதும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் முட்டைகோஸ் சேர்த்து கிளறி, உப்பு சேர்த்து கிளறி, அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

பிறகு அதனை சப்பாத்தியில் வைத்து, அதன் மேல் தக்காளி சில்லி சாஸ் தூவி சுருட்டினால், அருமையான வெஜிடேபிள் முட்டை ரோல் ரெடி!!!

குறிப்பு: கத்திரிக்காய் பிடிக்காது என்றால், அதனை போடாமல் செய்யலாம். மேலும் விருப்பமான காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.


Show commentsOpen link

Saturday 5 October 2013

மிர்ச்சி கா சாலன் - Mirchi Ka Salan

மிர்ச்சி கா சாலன் / Mirchi Ka Salan

by Asiya Omar
சமைத்து அசத்தலாம்

தேவையான பொருட்கள்;
இளம் பச்சை நிற பெரிய மிளகாய் - 6
(பஜ்ஜி மிளகாயை விட சிறியது)
வெங்காயம்- 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

வறுத்து அரைக்க:
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
கெட்டி தயிர் - அரை கப்

தாளிக்க:
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - இரண்டு இணுக்கு.

செய்முறை:
 தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.


ஒரு கடாயில் வேர்க்கடலை, எள்ளு,தேங்காய் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு லேசாக சிவற வறுத்து ஆற வைக்கவும்.

 மிளகாயை நன்கு அலசி கீறிவிட்டு விதையை எடுக்கவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம், கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.



 நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவற விடவும்.

 இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

 மற்ற மசாலாக்கள் சேர்க்கவும்.வதக்கவும்.

 அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.

 ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.

 கெட்டித்தயிர் சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.அடுப்பைக் குறைக்கவும்.

 பொரித்த மிளகாய் சேர்க்கவும்.

 அடுப்பை நன்கு குறைக்கவும்.மூடி விடவும்.

 எண்ணெய் மேலெழும்பி சால்னா கெட்டியாகி வரும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான மிர்ச்சி கான் சாலன் ரெடி.இந்த மிளகாய் கிடைக்காதவர்கள் பஜ்ஜி மிளகாயில் செய்து பாருங்க.

 சூடான சாதம் ,பிரியாணி,புலாவ் வகைகளுக்கு பக்க உணவாக பரிமாறவும்.

பிரியாணிக்கு வெங்காய பச்சடி, தொட்டுக்க  தால்ச்சா அல்லது எண்ணெய் கத்திரிக்காய் பொதுவாக வைப்போம்.வித்தியாசமாக ஏதாவது சைட் டிஷ் செய்ய நினைப்பவர்கள் மாற்றமாக  இந்த மிர்ச்சி கா சாலன் வைத்து பாருங்க,சூப்பராக இருக்கும்.இது ஹைதராபாத் ஸ்பெஷல் ஆகும்.இது முன்பே என் ஆங்கில வலைப்பூவில் பகிர்ந்த குறிப்பு தான்.ஒரு சில என் ஊர் தோழிகள்,குடும்பத்தார்கள்  ஆங்கிலத்தில் கொடுத்ததை தமிழிலும் கொடுங்க என்று அன்பாக கேட்டுக் கொண்டதால் இங்கும் சில ரெசிப்பிக்கள் பகிர எண்ணியுள்ளேன்.
கருத்துக்கள் குறைவாக வந்தாலும் நான் எப்பவும் என் ட்ராஃபிக் பார்த்து திருப்தி பட்டுக் கொள்வதுண்டு.மெயில் மூலம் தொடர்பு கொண்டு,நேரில்,தொலைபேசியில்  கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் வருகை தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

Show commentsOpen link

Thursday 3 October 2013

Oriental Basil Chicken

Oriental Basil Chicken

by vijigermany
New

Oriental Basil Chicken

Ingredients

2 Tbsp garlic

3 green chillies

3 red chillies

1 tsp oil

500 gms minced chicken

2 Tbsp oyster sauce

2 Tbsp light soya sauce

A handful of basil leaves

1 Tbsp castor sugar

Method

Crush some garlic, green chillies and red chillies together.

Heat the pan with oil for few minutes.

Add the smashed garlic and chillies in the preheated pan. When garlic starts to turn brown, add the chicken and stir for a few minutes.

The juice from the chicken will eventually start coming out. Keep stirring until all the juice is
absorbed. It will take a couple of minutes.

Add oyster sauce and light soya sauce. Then add basil leaves to it.

Quickly turn it over a few times to mix the leaves with the meat and then add castor sugar to it.

Mix it well for few minutes and remove from the fire.

Serve hot.

Show commentsOpen link

மணத்தக்காளிக் குழம்பு / Manathakkali Kuzhambu

மணத்தக்காளிக் குழம்பு / Manathakkali Kuzhambu
by Omar

இந்தச் செவ்வாய் தமிழர் சமையலுக்கு என்னுடைய பகிர்வு மணத்தக்காளிக் குழம்பு. நீங்களும் ஃப்ரெஷ் மணத்தக்காளி கிடைத்தால் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்;
மணத்தக்காளி - ஒரு கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு.

தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்ப்பூன்
பெருங்காயப்பொடி - 2 பின்ச்
கருவேப்பிலை - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் - நறுக்கியது - 10

வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் -3 அல்லது 4
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2  டேபிள்ஸ்பூன்

செய்முறை:
மணத்தக்காளி காயை காம்பு நீக்கி நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைக்கவும்.

 ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வற்றல், உளுத்தம் பருப்பு,துவரம் பருப்பு,மிளகு நன்கு மணம் வரும் படி சிவற வறுக்கவும்,அத்துடன் தேங்காய் துருவலும் சேர்த்து லேசாக வதக்கவும்.


 ஆற விடவும்.

 சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விடவும்.காய்ந்து வரும் பொழுது கடுகு,கருவேப்பிலை,வெடிக்கவும் பெருங்காயம்,சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். அடுத்து சுத்தம் செய்த மனத்தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

 புளித்தண்ணீர்,தேவைக்கு  உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும், மணத்தக்காளி வெந்த பின்பு அரைத்த மசால் சேர்க்கவும்.ஒரு சேர கொதிக்கட்டும். குழம்பு கெட்டியாகும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.விரும்பினால்  சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம்.

 எண்ணெய் மேலெழும்பி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.சிறிது மூடி வைக்கவும்.

 சுவையான மணத்தக்காளி குழம்பு ரெடி.இத்துடன்சுடு  சாதம் பொரித்த அப்பளம்,கூட்டு என்று பரிமாறினால் சூப்பராக இருக்கும்.

தமிழ் நாட்டுக் கிராமங்களில் இந்த மணத்தக்காளியில் குழம்பு,கீரைக் கூட்டு, வற்றல் குழம்பு என்று பாரம்பரியமாக சமைப்பது வழக்கம். சத்து நிறைந்த இந்த மணத்தக்காளி வாய்ப்புண்,வயிற்றுப்புண்ணிற்கு  ஒரு நல்ல மருந்து.பசியைத் தூண்டும்.நீங்களும் செய்து பாருங்க.

இக்குறிப்பை
TST - தமிழர் சமையல் செவ்வாய்க் கிழமை இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.
மற்றும் இக்குறிப்பை Gayathri's Walk Through Memory Lane @ Priya's Virunthu  -விற்கும் அனுப்பி வைக்கிறேன்.

Show commentsOpen link

Tuesday 1 October 2013

Indian Chicken Recipes

10 Best Indian Chicken Recipes

by vijigermany

Amritsari Murgh Makhani
Ingredients

For the marination:

500 gm chicken pieces (boneless)

2 tsp ginger paste

2 tsp garlic paste

3 tsp sour curd

1 Tbsp lemon juice

2 tsp vinegar

1 tsp coriander powder

1 tsp cumin powder

1/2 onion, chopped

1 1/2 tsp red chilli powder

Salt to taste

For the gravy:

6 tomatoes

1 1/2 Tbsp butter

1 tsp red chilli powder

1 tsp ginger - finely chopped

1 green chilli - finely chopped

1/4 tsp orange color

2 1/2 Tbsp fresh cream

1 tsp coriander powder

1 tsp cumin powder

1 tsp sugar

Salt to taste

For garnishing:

2 green chilies - chopped

1 Tbsp butter

2 Tbsp fresh cream

Fresh coriander leaves

Method

Blend 6 tomatoes to a puree. Mix all the ingredients for marination to make a paste. Smear the chicken pieces with the paste and let it marinate for 2 hours.

Heat 1 1/2 tbsp of butter in a heavy bottom wok and add the marinated chicken to it. Cook till the chicken is tender.

In a saucepan, heat 1 1/2 tbsp butter and add red chilli powder, coriander powder, cumin powder, ginger, salt and 1 chopped green chilli.

Fry for some time. Add tomato puree, orange color, fresh cream and cook on medium flame till the puree thickens.

Add the puree to the tender chicken along with 1 tsp sugar and 1/2 tsp cream. Let it simmer for 25 minutes.

Garnish with fresh cream, finely chopped green chillies and coriander leaves.

Serve with 1 Tbsp butter.

Show commentsOpen link

Monday 30 September 2013

Soya Beans Kuzhambu - சோயா பீன்ஸ் குழம்பு

Soya Beans Kuzhambu - சோயா பீன்ஸ் குழம்பு
by vijivedachalam
New
சோயா பீன்ஸில் பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இது எளிதில் செரிமானமடையக்கூடிய உணவுப் பொருள். எனவே இந்த சோயா பீன்ஸ் கொண்டு எளிய முறையில் ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு, மிகவும் சுவையான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் இது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற ரெசிபியும் கூட. பேச்சுலர்கள் எளிதில் செய்யக்கூடியது. சரி, இப்போது அந்த சோயா பீன்ஸ் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சோயா பீன்ஸ் மணிகள்- 2 கப் (வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள சோயாவை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு சோயாவை சேர்த்து நன்கு கிளறி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சோயா பீன்ஸ் குழம்பு ரெடி!!!
Show commentsOpen link

Sunday 29 September 2013

மல்வானி இறால் குழம்பு malwani iraal kulammpu tamil samayal kurippu

மல்வானி இறால் குழம்பு
by Marikumar
Tamil samayal kulampu vagaigal
மல்வானி இறால் குழம்பு ஒரு மகாராஷ்டிரா ஸ்டைல் ரெசிபிக்களில் ஒன்று. இந்த மல்வானி ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் தேங்காயை அதிகம் பயன்படுத்துவது தான். எனவே இந்த வாரம் சிக்கன், மட்டன் என்று செய்யாமல், சற்று வித்தியாசமாக இறாலை வாங்கி வந்து, மல்வானி ஸ்டைல் இறால் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
இதனை செய்முறை மிகவும் எளிமையானது. மேலும் இதனை செய்தால், வீட்டில் உள்ளோரிடம் நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இப்போது அந்த மல்வானி இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம்
புளிச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 3-4 பற்கள் (தட்டியது)
தேங்காய் பால் - 1 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்ழுன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு...
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்ன
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 2
பட்டை - 1
வரமிளகாய் - 2
கிராம்பு - 3
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது உப்பு தூவி, பிரட்டி தனியாக வைத்து விட வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய், சோம்பு, மல்லி, வெந்தயம் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் வெங்காயம் மற்றும் தேங்காய சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, இறக்க வேண்டும்.
கலவையானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாகவும் மென்மையாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்த்தும், தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட்டு, இறாலை போட்டு, குறைவான தீயிலேயே 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் புளிச்சாற்றினை ஊற்றி, கரம் மசாலா தூவி கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மல்வானி இறால் குழம்பு ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Share |
Show commentsOpen link

கத்திரிக்காய் பாசிப்பருப்பு கூட்டு - Brinjal moong dal curry

கத்திரிக்காய் மிளகூட்டல் / கத்திரிக்காய் பாசிப்பருப்பு கூட்டு / Brinjal moong dal curry
by Asiya Omar
சமைத்து அசத்தலாம்
Tamil samayal kurippugal
கத்திரிக்காய் எப்பவும் வீட்டில் இருக்கும் காய்கறிகளுள் ஒன்று. கத்திரிக்காய் வைத்து காரம்,புளிப்பாய் தான் குழம்பு,கறி செய்வோம். காரம்,குறைவான,புளிப்பில்லாத இந்த கூட்டை இன்று முயற்சி செய்து பார்த்தேன். இந்த மிளகூட்டலை, கேரட்,பீன்ஸ்,கோஸ் வைத்தும் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
பாசிப்பருப்பு - அரை கப்
பிஞ்சு கத்திரிக்காய் - 200 கிராம்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரைக்க:
சீரகத்தூள் அல்லது சீரகம் - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் -  2 டீஸ்பூன்
கடுகு - அரைடீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.
செய்முறை:
 தேவையான பொருட்களை ரெடி செய்யவும்.
 கத்திரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
 தேங்காய், வெங்காயம்,சீரகம் அரைத்து எடுக்கவும்.
 பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
 தேவைக்கு தண்ணீர் சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். பருப்பு பாதி வேக்காடு வெந்த பின்பு நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.
 மஞ்சள் பொடி,மிளகாய்ப்பொடி சேர்க்கவும்.
 தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
 வெந்த பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.நன்கு ஒரு சேர கொதிக்க விடவும்.
 கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.
கலந்து விட்டு பரிமாறவும்.
சுவையான கத்திரிக்காய் மிளகூட்டல் ரெடி.
இது பத்தியக்கறி போல் மைல்டாக இருக்கும், தக்காளி,புளி சேர்க்கவில்லை.சூடு சாதத்தில் பிரட்டி சாப்பிட சூப்பராக இருக்கும். சப்பாத்தி, பூரிக்கு நன்றாக இருக்கும்.
பிடித்திருந்தால் ஒரு மாற்றத்திற்கு செய்து பார்க்கலாம்.
Show commentsOpen link

Saturday 28 September 2013

சுரைக்காய் பொரியல் / Bottle gourd stir fry

சுரைக்காய் பொரியல் / Bottle gourd stir fry
by tamil
சமைத்து அசத்தலாம்
சுரைக்காய் எங்கள்  வீட்டில் அனைவருக்கும் பிடித்த காய்கறிகளுள் ஒன்று.மாதம் இரு முறையாவது மெனுவில் வரும்.
இதோ சுவையான சுரைக்காய் பொரியல் உங்களுக்காக:சைடு பாரில் இருக்கும் சுரைக்காயை கிளிக் செய்தால் மற்ற சுரைக்காய்
குறிப்புக்களைப்  பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
சுரைக்காய் - 400 கிராம்.( முழுசு - பிஞ்சாக இருக்கும்)
( தோல் சீவி, கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும், பிஞ்சு சுரைக்காயாக இருந்தால் விதை அவ்வளவாக இருக்காது.நான் விதை நீக்குவதில்லை)
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் ( ஒரு மணி நேரம் ஊறவைத்தது)
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
நறுக்கிய வெங்காயம் - மீடியம் சைஸ் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு.
கொர கொரப்பாக அரைக்க:
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிள்காய் - 2
சீரகம் -அரை டீஸ்பூன் 
அலங்கரிக்க -நறுக்கிய மல்லி இலை சிறிது.
பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்து வரும் பொழுது கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.நறுக்கிய சுரைக்காய், ஊறவைத்த பாசிப்பருப்பு சேர்த்து பிரட்டி விடவும்.அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.சுரைக்காயும் பாசிப்பருப்பும் ஒற்றை ஒற்றையாய் வெந்து வரும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
வெந்து இப்படி காணப்படும். 
கொரகொரப்பாக  அரைத்த தேங்காய்,மிளகாய்,சீரகம்  அரவையை சேர்க்கவும்.சட்னி மாதிரி அரைத்து விடக் கூடாது.முதலில் மிளகாய் சீரகம் போட்டு  அரைத்து விட்டு பின்பு தேங்காய் துருவல் போட்டு ஒரே சுற்று அவ்வளவு தான்.
(அரைக்காமல் அப்படியே தேங்காய் துருவல் சேர்ப்பதாய் இருந்தால் சீரகத்தை தாளிப்பில் சேர்த்து,பச்சை மிளகாயை கீறி போடவும்,முழுச்சீரகம் சேர்க்கப் பிரியபடாத்வர்கள்  சீரகப் பொடி கூட கால் ஸ்பூன் சேர்க்கலாம்,மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் சேர்த்தும் செய்யலாம். உங்கள் விருப்பம் தான்,.)
 நன்கு சிம்மில் வைத்து ஒரு சேர பிரட்டி விடவும்.
 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும்.பிரட்டி விட்டு பரிமாறவும்.

இக்குறிப்பை Gayathri's Walk Through Memory Lane @ Priya's Virunthu  -விற்கு அனுப்பி வைக்கிறேன்.
Show commentsOpen link

Friday 27 September 2013

ஆப்பம் செய்வது எப்படி? Easy Appam by Asiya Omar

ஈசி ஆப்பம் / Easy Appam
by Asiya Omar
சமைத்து அசத்தலாம்26 Sep 2013
சமைத்து அசத்தலாம் நேயர் ஷபானாவின் விருப்பத்திற்காக இந்த ஈசி ஆப்பம் பகிர்வு. இதே போல் செய்து பாருங்க,நிச்சயம் ஆப்பம் சூப்பராக வரும்.பெட்டர் லக் :) !
தேவையான பொருட்கள்;
பச்சரிசி - 300 கிராம் (ஒரு டம்ளர்)
தோல் நீக்கிய உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சோறு - 1 கப்
சோடா உப்பு - பெரிய பின்ச்
சீனி - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்
12 - 15 ஆப்பம் வரும்.
செய்முறை:
அரிசி,உளுந்து வெந்தயம் சேர்த்து நன்கு அலசி சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
 தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து மிக்ஸியில் ஒரு முறை அல்லது இரு முறையாகவோ போட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து விடவும். உப்பு,சோடா உப்பு,சீனி சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வைக்கவும்.முதல் நாள் மாலை அரைத்தால் மறுநாள் காலை சுட சரியாக இருக்கும்.
 குறைந்தது 14 மணி நேரம் மூடி வைக்கவும்.மாவு ஒரு ஒன்னரை அல்லது இரண்டு இன்ச் அளவு பொங்கி கலக்கி பார்த்தால் லேசாக இருக்கும்.நன்கு கலந்து தோசை மாவை விட கொஞ்சம் இளக்கமாக கரைத்து கொள்ளவும்.
 ஒரு கிழிக்கரண்டி மாவை எடுத்து நான்ஸ்டிக் ஆப்பச் சட்டி நன்கு காய்ந்த பின்பு விடவும்.ஆப்பச் சட்டியின் கைப்பிடியை பிடித்து மாவு வட்டமாக பரவுமாறு திருப்பி விடவும்.

மூடி போடவும்.
 சுற்றி லேசாக சிவந்து ஆப்பம் வெந்து வரும்.
அகப்பையக் கொண்டு லேசாக சைடில் விட்டால் ஆப்பம் அப்படியே சூப்பராக சட்டியில் இருந்து எழும்பி வரும்.
எடுத்து சூடாக பரிமாறலாம்.
 நடுவில் ஸ்பாஞ்சாக சுற்றி முறுகலான ஆப்பம் ரெடி. விருப்பமான சைட் டிஷ் உடன் பரிமாறவும்.
Show commentsOpen link

முட்டை கருவாடு மிளகு குழம்பு muttai karuvadu mizhaku kulampu

முட்டை கருவாடு மிளகு குழம்பு
by naliniselva
New Tamil  samayal kurippugal
"முட்டை கருவாடு மிளகு குழம்பு செய்யும் முறை:
தேவையான பொருட்கள்
வஞ்சிரம் கருவாடு : 3 துண்டு
முட்டை : 3
மிளகு சீரகம் : 25 கிராம்
நாட்டு பூண்டு : 30 பல்
நல்லெண்ணை : 50 கிராம்
புளி : எலுமிச்சம்பழம் அளவு
உப்பு : தேவையான அளவு
செய்முறை:
மிளகு சீரகத்தை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பூண்டை உரித்து அதில் பாதியை ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணை ஊற்றி அதில் முழுதாக உள்ள பூண்டை வதக்கவும். பிறகு தட்டிய பூண்டையும் வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகுசீரகத்தை போட்டு நன்றாக வதக்கி கருவாடையும் போட்டு பொரிந்தவுடன் புளியை கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து முட்டையை உடைத்து ஊற்றி வாணலியை மூடி வைத்து முட்டையை வேகவிடவும். சிறிது நேரம் கழித்து முட்டையை திருப்பி போட்டு வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டை கருவாடு மிளகு குழம்பு தயார்.
குறிப்பு : இந்த குழம்பிற்கு நல்லெண்ணை தான் ஊற்றவேண்டும். குழம்பில் அதிகம் தண்ணீர் ஊற்றக் கூடாது.
Attached Images

Show commentsOpen link

பீஸ்ஸா செய்வது எப்படி ? Pizza make in home

வீட்டிலும் செய்யலாம் பீஸ்ஸா
by veni
Google NewsToday,
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
கோஸ் – 100 கிராம்
ப.மிளகாய் – 1
வெங்காயம் – 1
மிளகு தூள் – 1ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கோதுமை மாவு – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
பால் – கால் கப்
இஞ்சி – சிறிய துண்டு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:
• பீன்ஸ், கேரட், இஞ்சி, வெங்காயம், ப,மிளகாய், கொத்தமல்லி தழை, கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி போட்டு வதக்கவும்.
• பின் வெங்காயம், ப.மிளகாய் போட்டு சிறிது வதக்கி காய்களை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
• கடைசியாக தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து சிறிது வதக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
• இந்த கலவை ஆற வைக்கவும்.
• கோதுமை மாவில், பால், காய்கறி மசாலா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
• இந்த மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.
• சத்து நிறைந்த இந்த வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.
The post வீட்டிலும் செய்யலாம் பீஸ்ஸா appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.
Show commentsOpen link

Mulukkoli Roast (oven method), the method முழுக்கோழி ரோஸ்ட்

முழுக்கோழி ரோஸ்ட் (ஓவன் முறை) செய்யும் முறை

தேவையான பொருள்கள்:

முழுக்கோழி - 800 - 1000 கிராம் (ப்ரெஷ் அல்லது ப்ரோசன்)
மஞ்சள் பவுடர் - அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்
சில்லி பவுடர் - அரை டீஸ்பூன்
மல்லி பவுடர் - அரை டீஸ்பூன்
சீரக பவுடர் - அரை டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ப்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
சூப் க்யூப் - 1 அல்லது உப்பு - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1
உப்பு - தேவைக்கு

செய்முறை:

Method of ice cream kulpi குல்பி ஐஸ்க்ரீம் செய்யும் முறை

Method of ice cream kulpi குல்பி ஐஸ்க்ரீம் செய்யும் முறை

தேவையான பொருட்கள் :

பால் - 2 லிட்டர்
பாதாம் - 15 கிராம்
பிஸ்தா - 15 கிராம்
முந்திரி - 15 கிராம்
கார்ன்ப்ளேவர் - 1 மேசைக்கரண்டி
ஜெலட்டின் - 2 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் - 1 தேக்கரண்டி
ஐசிங் சுகர் - 200 கிராம்

செய்முறை :

மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை The method of mango ice cream

The method of mango ice cream
 மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை The method of mango ice cream

தேவையான பொருட்கள்:

பெரிய மாம்பழம் - 2
பால் - 1 கோப்பை
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை
ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி

செய்முறை :

1. பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.

2. மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

3. அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.

4. குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.

5. பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.

6. பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்

Thursday 26 September 2013

Paneer and Orange Cake

Paneer and Orange Cake
by vijigermany
New Tamil

Paneer and Orange Cake

Ingredients

200 gm paneer (2 cups approx)

180 gm (1 1/2 cups) maida/ refined flour

3/4 cup fresh orange juice

2 Tbsp lemon juice

2 tsp baking powder

1/2 tsp vanilla

1 cup (240 gm) sugar

1/2 tsp salt

2 tsp orange rind

3 eggs

Marmalade to top the cake

A 9" round or 8" square tin, greased and dusted with flour or lined with grease proof paper

Method
Preheat the oven to 180 degrees C.

In a bowl, mix together - paneer, maida, orange juice, baking powder, vanilla, sugar and orange rind. Beat till smooth and glossy.

Add the eggs and beat again.

When smooth, transfer the mixture into a greased tin. Level it from the center and bake in a pre-heated oven for 10 minutes at 180 C. Then lower the temperature to 160 C and bake for another 25-30 minutes.

When cool, remove from the tin and transfer on to a serving dish. Spread a layer of marmalade over and serve.

Show commentsOpen link

Priya's Vegetable Kosu -Chettinadu Style Sidedish

Priya's Vegetable Kosu -Chettinadu Style Sidedish

by PriyagauthamH

Hi Friends ,

This is my take on the famous Chettinadu Vengaya kosu ......
My inspiration to try this was from watching Chef Jacob cooking it....
My online search took me to Solai's kitchen blog ....
My recipe is modified from both their preparations........

Ingredients

Big onion -1
Medium Tomato - 2
Mushroom-4
Big Potato-1
Cauliflower-handful
Carrot-1
Salt-to taste
Oil-1tbsp

Grind to a paste

Coconut -just over 1/4 of a coconut
Saunf-1/4 tsp
Poppy seeds-1/2 tsp
Redchillies-4
Roasted channadhal- 1 tbsp(pottukadalai)


Seasoning

Jeera-1/4 tsp
Saunf-1/4tsp
Cloves-2
Cinnamon-small piece

For Garnishing

Chopped coriander-1 tbsp

Preparation-15 mins

Chop the onions and Tomatoes finely ...
Chop the potatoes,mushroom, cauliflower and carrots to small pieces...
Grind the coconut , chillies, saunf, poppy seeds to a fine paste.....

Method

Heat the Pressure cooker
Add oil
Add the seasoning ingredients listed above ...
Add onions ..saute for a min and add salt ....
Add mushroom -saute and cook for two mins ...
Add the potatoes ,saute and add the cauliflower and carrots too ....
Saute the veg for a min and let it cook for a further 5 mins ...
Add the tomatoes, turmeric powder and cook for two mins...
Add the ground paste and mix well.....
Add 2 cups of water ...can add 1/2 a cup more if too thick....
Mix well and pressure cook for two whistles....
Garnish with Coriander leaves........
Serve with idly,dosai, chappati or Bread .........

BON APPETIT:hungry:
Note-4 red chillies gives a mild gravy suitable for children..... If you want a hotter gravy add couple more chillies........

Show commentsOpen link

Wednesday 25 September 2013

Kozhikodan Biryani

Kozhikodan Biryani

by vijigermany
New Tamil  03:19
Kozhikodan Biryani

Kozhikode also known as Calicut is a city in Kerala. This biryani recipe comes from down south. Rice cooked with chicken, spices and topped with boiled eggs.
Ingredients

1 kg chicken legs (small pieces)

400 gm rice

6 green cardamoms

2 cinnamon sticks

3 bay leaves

3 javitri

10 gm fennel seeds

200 gm onion

80 gm tomatoes

20 gm green chilli

50 gm ginger

50 gm garlic

50 gm red chilli powder

50 gm coriander

30 gm mint

5 gm turmeric

Salt to taste

15 gm garam masala

60 ml oil

4 eggs, boiled

30 gm butter

Method

Pour oil into the pot, add whole spices into it and stir a while.

Put crushed onions, julienne of green chillies and ginger.

Now add ginger & garlic paste, mint, coriander and stir.

Add turmeric, red chilli and fennel powder.

Now add pieces of chicken, chopped tomatoes, water and butter.

When chicken is almost cooked, add rice and salt.

Cover and simmer it for a while till done.

Show commentsOpen link

Friday 20 September 2013

Cooking of Vegetables காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா?

Cooking of Vegetables - காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் ĩ
by tnkesaven
New Tamil s - Penmai.comToday,
காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா?

காய்கறிகளைச் சமைக்கும்போது இருவகைகளில் அதன் சத்துக்கள் நீங்க வாய்ப்பு உண்டு. காய்கறிகளின் சத்துக்கள் நீரில் கரைந்து விடலாம். இது தவிர, வேக வைக்கும்போது சத்துக்கள் உஷ்ணத்தால் ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது சத்துக்கள் நீங்கிவிடும்.

வைட்டமின்-பி மற்றும் வைட்டமின்-சி ஆகியன நீரில் கரையும் தன்மை கொண்டவை. இவ்வகை வைட்டமின்கள் வீணாகாமல் இருக்க, காய்கறிகளை நறுக்கியபின் கழுவுவதைத் தவிர்த்து, கழுவியபின் நறுக்க வேண்டும்.

வைட்டமின்-ஏ மற்றும் கெரோட்டின் சத்துக்கள் நீரில் கரையாது. இருப்பினும், வேக வைக்கும்போது மிகச் சிறிய அளவில் ஆக்ஸிஜனேற்றம் அடையும் வாய்ப்பு உண்டு.

எனவே காரட், முள்ளங்கி, வெள்ளரிக் காய் போன்ற பச்சையாக உண்ணத் தகுந்த காய்கறிகளை பச்சையாகவே உண்பது நல்லது. வேக வைக்க வேண்டிய காய்கறிகளையும் அதிக அளவு வேக வைக்கக்கூடாது. மேலும், காய்கறி வேக வைத்த நீரினையும் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

காய்கறிகளை வறுப்பதாலும், பொரிப்பதாலும் 40 முதல் 60 சதவீதம் சத்துக்கள் நீங்கிவிடும்.
dinamalar

Show commentsOpen link

Thursday 19 September 2013

Healthy recipe: Ragi and Jowar Kanjji

Healthy recipe: Ragi and Jowar Kanjji

Packed with fiber, proteins, amino acids and antioxidants, ragi and jowar kanji is the best health drink for your kids. It not only gives their growing bodies essential nutrients, but also keeps them feeling full for longer.

Ingredients:

Ragi powder 1 cup

Jowar powder 2 cups

Jaggery  to taste

Water 3 cups

Ealichi (powder or whole)

Milk as needed

Method

Roast the ragi and jowar atta separately. After roasting, mix them together and add water while stirring. Make sure no lumps form. Add grated jaggery as per your preference. Mix well till all the jaggery pieces dissolve and the mixture becomes thick. Now sprinkleealichi powder for flavour. You may skip this step if you don't like the smell or flavour of the spice.

Allow the mixture to cool. This is your health drink concentrate. Now pour about two tablespoons of the concentrate to a tall glass and add unsweetened milk to it. Mix well so that it becomes homogenous and is easy to drink. You do need to add sugar to this since the concentrate already  has jaggery.

You can store the concentrate in a glass jar in the refrigerator for up to six months without spoiling. Make a large batch and watch your children lap up this healthy and yummy drink.

Another great use of the dry ragi and jowar atta mix is to add it to your roti batter. It gives you a homemade multi grain atta and helps your family stay fit.

For more articles on diet, check out our  fitness section and for videos, check out our YouTube Channel.

Show commentsOpen link

Wednesday 18 September 2013

Maida Dosai - மைதா தோசை

Maida Dosai - மைதா தோசை

by vijivedachalam
New Tamil - 

பெரும்பாலானோருக்கு தோசை என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய தோசைகளில் பல வகைகள் உள்ளன. அதில் பலருக்கு பிடித்த தோசையெனில், அது மசாலா தோசை தான். ஆனால் இந்த தோசையை எப்போதும் காலையில் எழுந்து விரைவில் செய்ய முடியாது. ஆனால் மைதா மாவைக் கொண்டு எளிமையான முறையில் தோசை செய்யலாம். இந்த தோசை மிகவும் சுவையாக இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட ட்ரை செய்யலாம். சரி, இப்போது அந்த மைதா தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
மைதா தோசை தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்
பச்சரிசி மாவு - 3/4 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பச்சரிசி மாவு, உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கி, அதனை கலந்து வைத்துள்ள மைதா மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான மைதா தோசை ரெடி!!!
இதனை மிளகாய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

Show commentsOpen link

Monday 16 September 2013

Chicken Pulao recipe - சிக்கன் புலாவ் ரெசிபி

Chicken Pulao recipe - சிக்கன் புலாவ் ரெசிபி

by vijivedachalam
New Tamil Jokes - Penmai.comToday,

பொதுவாக பலருக்கு சரியான பக்குவத்தில் சிக்கன் புலாவ் செய்யத் தெரியாது. அதிலும் எளிமையான முறையில் செய்யத் தெரியாமல் இருக்கலாம். குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்களுக்கு எளிமையானதாக இருக்கும். சரி, அந்த சிக்கன் புலாவ் ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்
சிக்கன் - 250 கிராம் (சிறிதாக வெட்டியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான
அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அரிசியை நன்கு கழுவி, 2 கப் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தக்காளியைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து கழுவி வைத்துள்ள சிக்கனைப் போட்டு, 4-5 நிமிடம் வதக்க வேண்டும். இறுதியில் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீருடன் சேர்த்து குக்கரில் ஊற்றி கிளறி, மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கினால், எளிமையான சிக்கன் புலாவ் ரெடி!!!

Show commentsOpen link

Kohinoor chicken recipe - கோஹினூர் சிக்கன் ரெசிபி

Kohinoor chicken recipe - கோஹினூர் சிக்கன் ரெசிபி

by vijivedachalam
New Tamil Jokes - Penmai.comToday,

விடுமுறை நாட்களில் தான் நன்கு சுவையான உணவுகளை சமைத்து, நிம்மதியாக சாப்பிட முடியும். அதிலும் சற்று வித்தியாசமான முறையில் சிக்கனை சமைத்து சாப்பிட்டால், அது வித்தியாசமான ரெசிபியாக இருப்பதோடு, வித்தியாசமான அனுபவத்தையும் பெறலாம். அந்த வகையில் கோஹினூர் வைரத்திற்கு மட்டும் பிரபலமல்ல, சிக்கன் ரெசிபிக்கும் தான் பிரபலமானது. ஏனெனில் அந்த அளவு கோஹினூர் சிக்கன் ரெசிபியின் ருசியானது இருக்கும். இப்போது அந்த கோஹினூர் சிக்கன் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (அரைத்தது)
தேங்காய் பால் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - தேவையான அளவு
கரம் மசாலா - 1-2 சிட்டிகை
குங்குமப்பூ - 1-2 சிட்டிகை
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் பாதி இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, கரம் மசாலா மற்றும் குங்குமப்பூ போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த சிக்கனை துண்டுகளை மைதா மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்து தக்காளி மற்றும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

கிரேவியானது நன்கு கொதித்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, கிரேவியானது ஓரளவு சுண்டும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். பின்னர் அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.

Cabbage Rava Uppuma - முட்டைகோஸ் ரவை உப்புமா

Cabbage Rava Uppuma - முட்டைகோஸ் ரவை உப்புமா

by vijivedachalam
New Tamil Jokes - Penmai.comToday,

காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. அது தான் ஒருநாளைக்குத் தேவையான அனைத்து ஆற்றலையும் தரும். குறிப்பாக கர்ப்பிணிகள் தவறாமல் காலை உணவை சாப்பிட வேண்டும்.

அதிலும் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் ரவையைக் கொண்டு உப்புமா செய்து சாப்பிட்டால், அதில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் கிடைக்கும்.

மேலும் எப்போதும் ஒரே மாதிரி உப்புமா செய்யாமல், சற்று வித்தியாசமாக ரவையுடன் முட்டைகோஸ் சேர்த்து உப்புமா செய்யலாம். இப்போது அந்த முட்டைகோஸ் ரவை உப்புமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!! கர்ப்பிணிகளுக்காக... முட்டைகோஸ் ரவை உப்புமா

தேவையான பொருட்கள்:
ரவை - 2 கப்
முட்டைகோஸ் - 1/2 கப் (நறுக்கியது)
கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 20 கிராம் (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

அடுத்து முட்டைகோஸ் சேர்த்து, முட்டைகோஸ் வேகும் வரை மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின்பு அதில் முந்திரி மற்றும் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் ரவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான முட்டைகோஸ் ரவை உப்புமா ரெடி!!!

Saturday 14 September 2013

Ganesh Chaturthi special: Healthy modak recipes

Ganesh Chaturthi special: Healthy modak recipes

From beetroot, to oats and fruit fillings, this season experience modaks with a healthy twist The festivities and sweets may make your diet go for a toss. But there is a way to gorge on your favourite sweet and still stay healthy. Make a healthy choice this festive season by opting for fruit or veggie modaks that are equally tasty.

Chef Shailendra Kekade shares, 'The best way to go healthy is by adding a lot of fruits and nuts to the filling of modaks. Go the steamed way and completely avoid frying them. Ghee is a healthier option to oil.' He suggests that one should go all out and experiment with various fruits and vegetables for the filling. Another twist he recommends is replacing the flour covering. 'Instead of rice flour, use de-hydrated fruit slices and fruit pulp. It is healthy, tasty and nutritious.'

Roasted modak is another option one could go for. Sous chef at Hyatt Regency, Sarika Kamble shares, 'Roasting the modak in the oven is not only healthy but also provides a crispy and crunchy taste.' The stuffing could be anything from oats, to nuts to diced fruits.

Explaining the interesting fruit-covering, Kekade adds that fruit slices can be dehydrated for 24 hours to form the cover of a fruit modak. 'Or spread 50 gm of mango pulp on a butter paper, dehydrated for 24 hours. Cut fresh fruits into small dices. Stuff the prepared sheets of mango and watermelon with stuffing of your choice and shape up the modak. On a serving plate, place the modaks on a base of a small amount of stuffing and sprinkle the diced fruits on the plate.'

Go all out the healthy way with these lip-smacking modak recipes'

Beetroot Modak

by Chef Shailendra Kekade

Ingredients

Beetroot 1 cup

Orange rind as per taste

Rice flour 2 bowls

Ghee as per taste

Water

Salt and oil to taste

Method:

Grate beetroot and add sugar as per taste. Now, bring one cup of water to boil with a pinch of salt and a teaspoon of oil added in. Once the water boils, add two cups of rice flour and stir continuously till a batter of thick consistency is formed. Put it out in a plate and let it cool. Make small, circular balls and press them down in the centre to form a hollow. Fill in the mixture of beetroot. Now, close both sides of the modak. Taper the top of the modak to get that traditional shape. Once shaped, let it steam for 5-10 minutes. Eat topped with a generous dollop of melted ghee mixed with orange rind. (Health benefits of beetroot)

Roasted Modak

by Chef Sarika Kamble

Ingredients:

Wheat flour 100gm

Refined flour 50gm

Coconut grated/ fruits/ dry fruits/ nuts 200gm

Cardamom powder a pinch

Sesame seeds 1tsp

Method:

Sieve the flour with salt and add warm oil to it. Add water and knead to a smooth dough. Take fresh or desiccated coconut, jaggery, roasted sesame seeds, cardamom and nutmeg powder in a kadhai or pan.

If using nuts or dry fruits chop them fine. Mix them all. Add water. Cook the whole mixture on a low or medium flame. Stir for 8-10 minutes till the jaggery melts, the water dries up and mixture is cooked & dry. Keep the mixture aside to cool.

Take a small sized ball of the dough. With a rolling pin gently make a thin round dusting the surface or the dough ball with some dry flour. Take the rolled dough circle on your palm add the some spoonful of the filling in the centre. Now start pinching the edges one by one. Bring all the pinched ends together and taper the centre. Cover with a cloth so that the dough does not dry out. Grease a tray with a little oil and bake at 140 degrees for 10 – 12 mins. (Make Ganesh  Chaturthi special with healthy treats)

Source: DNA

Show commentsOpen link

Friday 13 September 2013

காளான் சமோசா kaalan samosa

காளான் சமோசா

மாலை வேளையில் மழைப் பெய்யும் போது நன்கு மொறுமொறுவென்று இருக்கும் ஸ்நாக்ஸ்களை அதிகம் சாப்பிடத் தோன்றும். பொதுவாக அப்போது வடை, பஜ்ஜி போன்றவை தான் ஈஸி என்று நினைத்து, அதனையே செய்து சாப்பிடுவோம். ஆனால் வடை, பஜ்ஜி போன்றே, மிகவும் எளிதாக சமோசாக்களையும் செய்யலாம். அதுவும் காளான் சமோசாவை எளிதில் செய்யலாம். அந்த வகையில் அதன் செய்முறை ஈஸியாக இருக்கும்.

சரி, இப்போது அந்த காளான் சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 1/2 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு...

வெங்காயம் - 1 (நறுக்கியது)
பட்டன் காளான் - 300 கிராம் (பொடியாக வெட்டியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், காளான், பச்சை மிளகாய், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளான் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் சமோசாக்களாக செய்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
 இப்போது சூப்பரான காளான் சமோசா ரெடி!!!

Thatstamil

Share |

Show commentsOpen link

Wednesday 11 September 2013

ஞாபக சக்தியால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்ற உணவுகள்! Food for memory increase

தமிழ்ச் சமுதாயம்  -  தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி:
ஞாபக சக்தியால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்ற உணவுகள்!

நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது. தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள்.

மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேயே, அல்சைமர் நோயானது பரம்பரை காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், இதர காரணிகளும் அல்சைமர் நோயை உண்டாக்கலாம் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் சத்துணவு, கல்வி, நீரிழிவு நோய், உளவியல் செயல்பாடுகள், உடலியல் செயல்பாடுகள் போன்றவை அடங்கும். மேலும் அல்சைமர் நோயை, டிமென்ஷியா/முதுமை மறதி (dementia) என்றும் அழைப்பார்கள். இப்போது இந்த அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதிலிருந்து விடுபடலாம்.

தானியங்கள் மற்றும் நட்ஸ்

தானிய வகைகள், குறிப்பாக கோதுமையானது புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் கோதுமையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகிய நட்ஸ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவைகளும் புதிய செல் உற்பத்திக்கு உதவி புரிகின்றன.

கடல் சிப்பி

நீங்கள் கடல் உணவு பிரியரா? அப்படியெனில் கடல் சிப்பிகளை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அவற்றில் துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. எனவே அவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கின்றன. மேலும் இப்பழம் வயதிற்கும், உடலிலுள்ள செல்களின் அளவுக்கும் உள்ள சமநிலையைப் பேணவும் மிகவும் உதவியாக உள்ளது.

செர்ரி

செர்ரிப் பழத்தில் உடலுக்குத் தேவையான பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் இதய நோய்கள் மற்றும் டிமென்ஷியா நோய் ஏற்படுவதைத் தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது.

மீன்கள்

மீன்களில் குறிப்பாக சால்மன், சூரைமீன் போன்றவற்றை உண்பதன் மூலம், மூளை நன்றாக வளரும். ஏனெனில் மீன்களில் கால்சியமும், புரதச்சத்தும் நிறைந்துள்ளன. இவ்விரண்டு சத்துக்களும் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.

தக்காளி

தக்காளியில் லைகோபைன்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கின்றன. மேலும் இவை டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.

முட்டைகள்

முட்டைகளில் வைட்டமின் பி12 மற்றும் கோலைன் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவை மூளைச் செல்களின் உற்பத்தியைத் தூண்டி, நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது, மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது.

மாட்டுக்கறி

கொழுப்பற்ற மாட்டுக்கறியானது இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ள ஒரு உணவாகும். இவை மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மேலும் இவை மூளையின் நியூரான்களின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றன.

தயிர்

தயிரில் உள்ள அமினோ அமிலங்கள், மன இறுக்கத்தைக் குறைக்கின்றன. பொதுவாக மன இறுக்கம் அதிகமானால், மூளைச் செல்கள் சீக்கிரம் முதுமையடைந்து விடுகின்றனவாம். ஆகவே தயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சாக்லெட்

அதிகமான சாக்லெட்டுக்கள் சாப்பிடுவது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும், டார்க் சாக்லெட்டுகள் மூளைக்கு மிகவும் நல்லவை. இவற்றில் உள்ள ஃப்ளேவோனால்கள், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க

Popular Posts

Popular Posts