My Blog List

Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Friday, 20 September 2013

Cooking of Vegetables காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா?

Cooking of Vegetables - காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் ĩ
by tnkesaven
New Tamil s - Penmai.comToday,
காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா?

காய்கறிகளைச் சமைக்கும்போது இருவகைகளில் அதன் சத்துக்கள் நீங்க வாய்ப்பு உண்டு. காய்கறிகளின் சத்துக்கள் நீரில் கரைந்து விடலாம். இது தவிர, வேக வைக்கும்போது சத்துக்கள் உஷ்ணத்தால் ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது சத்துக்கள் நீங்கிவிடும்.

வைட்டமின்-பி மற்றும் வைட்டமின்-சி ஆகியன நீரில் கரையும் தன்மை கொண்டவை. இவ்வகை வைட்டமின்கள் வீணாகாமல் இருக்க, காய்கறிகளை நறுக்கியபின் கழுவுவதைத் தவிர்த்து, கழுவியபின் நறுக்க வேண்டும்.

வைட்டமின்-ஏ மற்றும் கெரோட்டின் சத்துக்கள் நீரில் கரையாது. இருப்பினும், வேக வைக்கும்போது மிகச் சிறிய அளவில் ஆக்ஸிஜனேற்றம் அடையும் வாய்ப்பு உண்டு.

எனவே காரட், முள்ளங்கி, வெள்ளரிக் காய் போன்ற பச்சையாக உண்ணத் தகுந்த காய்கறிகளை பச்சையாகவே உண்பது நல்லது. வேக வைக்க வேண்டிய காய்கறிகளையும் அதிக அளவு வேக வைக்கக்கூடாது. மேலும், காய்கறி வேக வைத்த நீரினையும் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

காய்கறிகளை வறுப்பதாலும், பொரிப்பதாலும் 40 முதல் 60 சதவீதம் சத்துக்கள் நீங்கிவிடும்.
dinamalar

Show commentsOpen link

Thursday, 19 September 2013

Healthy recipe: Ragi and Jowar Kanjji

Healthy recipe: Ragi and Jowar Kanjji

Packed with fiber, proteins, amino acids and antioxidants, ragi and jowar kanji is the best health drink for your kids. It not only gives their growing bodies essential nutrients, but also keeps them feeling full for longer.

Ingredients:

Ragi powder 1 cup

Jowar powder 2 cups

Jaggery  to taste

Water 3 cups

Ealichi (powder or whole)

Milk as needed

Method

Roast the ragi and jowar atta separately. After roasting, mix them together and add water while stirring. Make sure no lumps form. Add grated jaggery as per your preference. Mix well till all the jaggery pieces dissolve and the mixture becomes thick. Now sprinkleealichi powder for flavour. You may skip this step if you don't like the smell or flavour of the spice.

Allow the mixture to cool. This is your health drink concentrate. Now pour about two tablespoons of the concentrate to a tall glass and add unsweetened milk to it. Mix well so that it becomes homogenous and is easy to drink. You do need to add sugar to this since the concentrate already  has jaggery.

You can store the concentrate in a glass jar in the refrigerator for up to six months without spoiling. Make a large batch and watch your children lap up this healthy and yummy drink.

Another great use of the dry ragi and jowar atta mix is to add it to your roti batter. It gives you a homemade multi grain atta and helps your family stay fit.

For more articles on diet, check out our  fitness section and for videos, check out our YouTube Channel.

Show commentsOpen link

Wednesday, 18 September 2013

Maida Dosai - மைதா தோசை

Maida Dosai - மைதா தோசை

by vijivedachalam
New Tamil - 

பெரும்பாலானோருக்கு தோசை என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய தோசைகளில் பல வகைகள் உள்ளன. அதில் பலருக்கு பிடித்த தோசையெனில், அது மசாலா தோசை தான். ஆனால் இந்த தோசையை எப்போதும் காலையில் எழுந்து விரைவில் செய்ய முடியாது. ஆனால் மைதா மாவைக் கொண்டு எளிமையான முறையில் தோசை செய்யலாம். இந்த தோசை மிகவும் சுவையாக இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட ட்ரை செய்யலாம். சரி, இப்போது அந்த மைதா தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
மைதா தோசை தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்
பச்சரிசி மாவு - 3/4 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பச்சரிசி மாவு, உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கி, அதனை கலந்து வைத்துள்ள மைதா மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான மைதா தோசை ரெடி!!!
இதனை மிளகாய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

Show commentsOpen link

Monday, 16 September 2013

Chicken Pulao recipe - சிக்கன் புலாவ் ரெசிபி

Chicken Pulao recipe - சிக்கன் புலாவ் ரெசிபி

by vijivedachalam
New Tamil Jokes - Penmai.comToday,

பொதுவாக பலருக்கு சரியான பக்குவத்தில் சிக்கன் புலாவ் செய்யத் தெரியாது. அதிலும் எளிமையான முறையில் செய்யத் தெரியாமல் இருக்கலாம். குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்களுக்கு எளிமையானதாக இருக்கும். சரி, அந்த சிக்கன் புலாவ் ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்
சிக்கன் - 250 கிராம் (சிறிதாக வெட்டியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான
அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அரிசியை நன்கு கழுவி, 2 கப் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தக்காளியைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து கழுவி வைத்துள்ள சிக்கனைப் போட்டு, 4-5 நிமிடம் வதக்க வேண்டும். இறுதியில் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீருடன் சேர்த்து குக்கரில் ஊற்றி கிளறி, மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கினால், எளிமையான சிக்கன் புலாவ் ரெடி!!!

Show commentsOpen link

Kohinoor chicken recipe - கோஹினூர் சிக்கன் ரெசிபி

Kohinoor chicken recipe - கோஹினூர் சிக்கன் ரெசிபி

by vijivedachalam
New Tamil Jokes - Penmai.comToday,

விடுமுறை நாட்களில் தான் நன்கு சுவையான உணவுகளை சமைத்து, நிம்மதியாக சாப்பிட முடியும். அதிலும் சற்று வித்தியாசமான முறையில் சிக்கனை சமைத்து சாப்பிட்டால், அது வித்தியாசமான ரெசிபியாக இருப்பதோடு, வித்தியாசமான அனுபவத்தையும் பெறலாம். அந்த வகையில் கோஹினூர் வைரத்திற்கு மட்டும் பிரபலமல்ல, சிக்கன் ரெசிபிக்கும் தான் பிரபலமானது. ஏனெனில் அந்த அளவு கோஹினூர் சிக்கன் ரெசிபியின் ருசியானது இருக்கும். இப்போது அந்த கோஹினூர் சிக்கன் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (அரைத்தது)
தேங்காய் பால் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - தேவையான அளவு
கரம் மசாலா - 1-2 சிட்டிகை
குங்குமப்பூ - 1-2 சிட்டிகை
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் பாதி இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, கரம் மசாலா மற்றும் குங்குமப்பூ போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த சிக்கனை துண்டுகளை மைதா மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்து தக்காளி மற்றும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

கிரேவியானது நன்கு கொதித்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, கிரேவியானது ஓரளவு சுண்டும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். பின்னர் அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.

Cabbage Rava Uppuma - முட்டைகோஸ் ரவை உப்புமா

Cabbage Rava Uppuma - முட்டைகோஸ் ரவை உப்புமா

by vijivedachalam
New Tamil Jokes - Penmai.comToday,

காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. அது தான் ஒருநாளைக்குத் தேவையான அனைத்து ஆற்றலையும் தரும். குறிப்பாக கர்ப்பிணிகள் தவறாமல் காலை உணவை சாப்பிட வேண்டும்.

அதிலும் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் ரவையைக் கொண்டு உப்புமா செய்து சாப்பிட்டால், அதில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் கிடைக்கும்.

மேலும் எப்போதும் ஒரே மாதிரி உப்புமா செய்யாமல், சற்று வித்தியாசமாக ரவையுடன் முட்டைகோஸ் சேர்த்து உப்புமா செய்யலாம். இப்போது அந்த முட்டைகோஸ் ரவை உப்புமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!! கர்ப்பிணிகளுக்காக... முட்டைகோஸ் ரவை உப்புமா

தேவையான பொருட்கள்:
ரவை - 2 கப்
முட்டைகோஸ் - 1/2 கப் (நறுக்கியது)
கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 20 கிராம் (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

அடுத்து முட்டைகோஸ் சேர்த்து, முட்டைகோஸ் வேகும் வரை மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின்பு அதில் முந்திரி மற்றும் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் ரவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான முட்டைகோஸ் ரவை உப்புமா ரெடி!!!

Saturday, 14 September 2013

Ganesh Chaturthi special: Healthy modak recipes

Ganesh Chaturthi special: Healthy modak recipes

From beetroot, to oats and fruit fillings, this season experience modaks with a healthy twist The festivities and sweets may make your diet go for a toss. But there is a way to gorge on your favourite sweet and still stay healthy. Make a healthy choice this festive season by opting for fruit or veggie modaks that are equally tasty.

Chef Shailendra Kekade shares, 'The best way to go healthy is by adding a lot of fruits and nuts to the filling of modaks. Go the steamed way and completely avoid frying them. Ghee is a healthier option to oil.' He suggests that one should go all out and experiment with various fruits and vegetables for the filling. Another twist he recommends is replacing the flour covering. 'Instead of rice flour, use de-hydrated fruit slices and fruit pulp. It is healthy, tasty and nutritious.'

Roasted modak is another option one could go for. Sous chef at Hyatt Regency, Sarika Kamble shares, 'Roasting the modak in the oven is not only healthy but also provides a crispy and crunchy taste.' The stuffing could be anything from oats, to nuts to diced fruits.

Explaining the interesting fruit-covering, Kekade adds that fruit slices can be dehydrated for 24 hours to form the cover of a fruit modak. 'Or spread 50 gm of mango pulp on a butter paper, dehydrated for 24 hours. Cut fresh fruits into small dices. Stuff the prepared sheets of mango and watermelon with stuffing of your choice and shape up the modak. On a serving plate, place the modaks on a base of a small amount of stuffing and sprinkle the diced fruits on the plate.'

Go all out the healthy way with these lip-smacking modak recipes'

Beetroot Modak

by Chef Shailendra Kekade

Ingredients

Beetroot 1 cup

Orange rind as per taste

Rice flour 2 bowls

Ghee as per taste

Water

Salt and oil to taste

Method:

Grate beetroot and add sugar as per taste. Now, bring one cup of water to boil with a pinch of salt and a teaspoon of oil added in. Once the water boils, add two cups of rice flour and stir continuously till a batter of thick consistency is formed. Put it out in a plate and let it cool. Make small, circular balls and press them down in the centre to form a hollow. Fill in the mixture of beetroot. Now, close both sides of the modak. Taper the top of the modak to get that traditional shape. Once shaped, let it steam for 5-10 minutes. Eat topped with a generous dollop of melted ghee mixed with orange rind. (Health benefits of beetroot)

Roasted Modak

by Chef Sarika Kamble

Ingredients:

Wheat flour 100gm

Refined flour 50gm

Coconut grated/ fruits/ dry fruits/ nuts 200gm

Cardamom powder a pinch

Sesame seeds 1tsp

Method:

Sieve the flour with salt and add warm oil to it. Add water and knead to a smooth dough. Take fresh or desiccated coconut, jaggery, roasted sesame seeds, cardamom and nutmeg powder in a kadhai or pan.

If using nuts or dry fruits chop them fine. Mix them all. Add water. Cook the whole mixture on a low or medium flame. Stir for 8-10 minutes till the jaggery melts, the water dries up and mixture is cooked & dry. Keep the mixture aside to cool.

Take a small sized ball of the dough. With a rolling pin gently make a thin round dusting the surface or the dough ball with some dry flour. Take the rolled dough circle on your palm add the some spoonful of the filling in the centre. Now start pinching the edges one by one. Bring all the pinched ends together and taper the centre. Cover with a cloth so that the dough does not dry out. Grease a tray with a little oil and bake at 140 degrees for 10 – 12 mins. (Make Ganesh  Chaturthi special with healthy treats)

Source: DNA

Show commentsOpen link

Friday, 13 September 2013

காளான் சமோசா kaalan samosa

காளான் சமோசா

மாலை வேளையில் மழைப் பெய்யும் போது நன்கு மொறுமொறுவென்று இருக்கும் ஸ்நாக்ஸ்களை அதிகம் சாப்பிடத் தோன்றும். பொதுவாக அப்போது வடை, பஜ்ஜி போன்றவை தான் ஈஸி என்று நினைத்து, அதனையே செய்து சாப்பிடுவோம். ஆனால் வடை, பஜ்ஜி போன்றே, மிகவும் எளிதாக சமோசாக்களையும் செய்யலாம். அதுவும் காளான் சமோசாவை எளிதில் செய்யலாம். அந்த வகையில் அதன் செய்முறை ஈஸியாக இருக்கும்.

சரி, இப்போது அந்த காளான் சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 1/2 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு...

வெங்காயம் - 1 (நறுக்கியது)
பட்டன் காளான் - 300 கிராம் (பொடியாக வெட்டியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், காளான், பச்சை மிளகாய், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளான் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் சமோசாக்களாக செய்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
 இப்போது சூப்பரான காளான் சமோசா ரெடி!!!

Thatstamil

Share |

Show commentsOpen link

Wednesday, 11 September 2013

ஞாபக சக்தியால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்ற உணவுகள்! Food for memory increase

தமிழ்ச் சமுதாயம்  -  தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி:
ஞாபக சக்தியால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்ற உணவுகள்!

நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது. தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள்.

மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேயே, அல்சைமர் நோயானது பரம்பரை காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், இதர காரணிகளும் அல்சைமர் நோயை உண்டாக்கலாம் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் சத்துணவு, கல்வி, நீரிழிவு நோய், உளவியல் செயல்பாடுகள், உடலியல் செயல்பாடுகள் போன்றவை அடங்கும். மேலும் அல்சைமர் நோயை, டிமென்ஷியா/முதுமை மறதி (dementia) என்றும் அழைப்பார்கள். இப்போது இந்த அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதிலிருந்து விடுபடலாம்.

தானியங்கள் மற்றும் நட்ஸ்

தானிய வகைகள், குறிப்பாக கோதுமையானது புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் கோதுமையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகிய நட்ஸ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவைகளும் புதிய செல் உற்பத்திக்கு உதவி புரிகின்றன.

கடல் சிப்பி

நீங்கள் கடல் உணவு பிரியரா? அப்படியெனில் கடல் சிப்பிகளை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அவற்றில் துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. எனவே அவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கின்றன. மேலும் இப்பழம் வயதிற்கும், உடலிலுள்ள செல்களின் அளவுக்கும் உள்ள சமநிலையைப் பேணவும் மிகவும் உதவியாக உள்ளது.

செர்ரி

செர்ரிப் பழத்தில் உடலுக்குத் தேவையான பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் இதய நோய்கள் மற்றும் டிமென்ஷியா நோய் ஏற்படுவதைத் தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது.

மீன்கள்

மீன்களில் குறிப்பாக சால்மன், சூரைமீன் போன்றவற்றை உண்பதன் மூலம், மூளை நன்றாக வளரும். ஏனெனில் மீன்களில் கால்சியமும், புரதச்சத்தும் நிறைந்துள்ளன. இவ்விரண்டு சத்துக்களும் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.

தக்காளி

தக்காளியில் லைகோபைன்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கின்றன. மேலும் இவை டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.

முட்டைகள்

முட்டைகளில் வைட்டமின் பி12 மற்றும் கோலைன் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவை மூளைச் செல்களின் உற்பத்தியைத் தூண்டி, நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது, மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது.

மாட்டுக்கறி

கொழுப்பற்ற மாட்டுக்கறியானது இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ள ஒரு உணவாகும். இவை மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மேலும் இவை மூளையின் நியூரான்களின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றன.

தயிர்

தயிரில் உள்ள அமினோ அமிலங்கள், மன இறுக்கத்தைக் குறைக்கின்றன. பொதுவாக மன இறுக்கம் அதிகமானால், மூளைச் செல்கள் சீக்கிரம் முதுமையடைந்து விடுகின்றனவாம். ஆகவே தயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சாக்லெட்

அதிகமான சாக்லெட்டுக்கள் சாப்பிடுவது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும், டார்க் சாக்லெட்டுகள் மூளைக்கு மிகவும் நல்லவை. இவற்றில் உள்ள ஃப்ளேவோனால்கள், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க

Saturday, 31 August 2013

மெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி!

தமிழால் இணைவோம்:
மெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி!

நம்ம தமிழ்நாட்டு சமையல் கட்டுல வெங்காயம் இல்லாம ஒரு வேலையும் நடக்காது. அந்த அளவுக்கு நம்ம உணவுல வெங்காயம் ஐக்கியமாகிப் போன ஒன்னு வெங்காயத்துக்கு இருக்கிற மருத்துவ குணமே தனிதான். வெங்காய சாம்பார், வெங்காய வடகம், வெங்காயச் சட்னி, வெங்காயப் பச்சடி என வெங்காய உணவுகள் பட்டியல் ரொம்ப நீளமானது.

சில வினாடிகள் நேரத்தில் தயார் செய்யப்படும் வெங்காயப் பச்சடிக்கு உள்ள சிறப்பே சிறப்புதான்.

வெங்காயத்தைக் குறுக குறுக அறிஞ்சு, அதில் மோர் விட்டுக் கலந்து கொஞ்சம் உப்பு, மிளகு சீரகம் போட்டு தாளிச்சிட்டா வெங்காயப் பச்சடி தயார். பகல் உணவில் இதை ஒரு அங்கமா எடுத்துக்கிட்டு சாப்பிடலாம்.

பொதுவாக வெங்காயம் நச்சுக்கிருமிக் கொல்லியாக உடம்பை மெலிதாக்க குரலை இனிமையாக்கி, விஷக்கடி, குழிப்புண்களைக் கட்டுப்படுத்த பித்தம் தணிய, மூளை சுறுசுறுப்பாக, கால் கை வலிப்பு நோய் நீங்க, கொழுப்புச் சத்தை கரைக்க, வயிற்றுக் கட்டிகளை நீக்க எனப் பல வகையிலும் பயன்படும். இதன் மகத்துவத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அண்மையில் கிங்ஜார்ஜீ மருத்துவ ஆய்வுக் கழகத்தில் ஆராய்ச்சி செய்தபோது பக்கவாதம் எனப்படும் மூளை, இரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு பச்சை வெங்காயம் முழு பலன் தர்றதாக் கண்டுபிடிச்சு சொல்லியிருக்காங்க.

அதுமட்டுமல்ல, புகை, பிடிப்பதால் ஏற்படும் நிகோடின் என்னும் நஞ்சினை முறித்து நுரையீரலுக்கும் இதயத்திற்கும் வலிமையை தருது. இன்னொரு உண்மை ரோமானிய நாட்டில் இடைமெலிந்திருக்க பெண்கள் வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்களாம். நீரோ மன்னன் குரல் இனிமைக்காக வெங்காயத்தைத் தினமும் சாப்பிட்டானாம்.

பொதுவாக வெங்காயத்தை எல்லோரும் பயன்படுத்தலாம். தீவிர இரத்த சோகை இருப்பவர்கள் மட்டும் அதிகளவு சாப்பிடுவதை தவிர்க்கணும். 40 வயதுக்கு மேலே ஆனவர்கள். கண்டிப்பா வாரம் இரண்டு முறையாவது வெங்காயத்தை உணவுல சேர்த்துக்கணும்.

Visit our Page -► தமிழால் இணைவோம்

Tuesday, 27 August 2013

கொளுக்கட்டை செய்யும் முறை

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி 1 ஆழாக்கு,

தேங்காய் அரை மூடி

காய்ந்த‌ மிளக்கய் 7 அல்லது 8

பெருங்காயம் சிறிது ,

உப்பு தேவையான‌ அளவு

தாளிக்க‌ தேவையான‌ பொருள்கள்;‍

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை 1 ஆர்க்கு

செய்முறை

முதலில் அரிசியை  ஒரு மணி நேரம்  ஊற வத்துக் கொள்ளவும்   
தேங்காயை  துருவிக்கொள்ளவும்                                  
அரிசியை மிக்ஸியில்  அல்லது  கல்லுரலில்     போட்டு  உப்பு சேர்த்து கரகரப்பாக‌   அரைத்துக்  கொள்ளவும்   
பிறகு   வாணலியை    அடுப்பிலேற்றி   ஒரு  குழி கரண்டி    சமையல் எண்ணெய்   ஊற்றி  காய்ந்ததும்  கடுகு  உளுத்தம்  பருப்பு   காய்ந்த மிளகாய்  கிள்ளி சேர்த்து  தாளித்து   அரைத்த விழுதினை  சேர்த்து  கையில்  ஒட்டாத‌  பதத்திற்கு   கிளறி   இறக்கவும்   
பிறகு   தேங்காய்  துருவலை  சேர்த்து  னன்கு  கிளறி      ஒரு  சிறிய‌  எலுமிச்சை பழம்   அளவுகளில்     உருட்டி பிடித்து    இட்லி   பானையில்  வேக வைத்து  எடுத்து   சூடாக‌  பரிமாறவும்     
தேவையானால்   தொட்டுக்  கொள்ள‌            தேங்காய்  சட்னி   வைத்துக்  கொள்ளலாம்

Saturday, 24 August 2013

சமையல்: பாதுஷா - badusha

தேவையான பொருட்கள்

மைதா மாவு _ மூன்று கப்
தயிர் ‍_ ஒரு டேபில் ஸ்பூன் அளவு
சமையல் சோடா _ அரை டீஸ் பூன்
சக்கரை _ ஒன்டரைக்கப்
எண்ணைய் _தேவையான‌ அளவு
நெய் _ தேவையான‌ அளவு

செய்முறை

ஒரு அகன்ற‌ பாத்திரத்தில் மைதாமாவை கொட்டி ஒரு கப் நெய்யை உருக்காமல் போட்டு கிளறவும் ..பின்பு
தயிரில் சமையல் சோடாவை நுரைக்க‌ அடித்து மைதாமாவில்
போட்டு பிசைக்கவும்
சக்கரையை அரைக்கப் சிறு தண்ணீர் ஊற்றி பாகுபோல் காச்சவும் ....
மைதாமாவை எலுமிச்சையளவு உருட்டி கொஞ்சம் தட்டையாக்கி நடிவில் கட்டை விரலால் குழிவைத்து எண்ணையில் போட்டு பொரிக்கவும் ...
பின்பு சூடாக‌ இருக்கும் போதே சக்கரைப்பாகுவில் தோய்த்து எடுக்கவும் ...
பாதுஷா.. ரெடியுங்க‌......

இஞ்சி மல்லி காபி - ginjer cofee

சமையல்: இஞ்சி மல்லி காபி [ ginjer cofee]

 தேவையான பொருட்கள்

இஞ்சி 50 கிராம் , தனியா எனப்படும்  கொத்தமல்லி விதை  1 மேசைக்கரண்டி   வெல்லம் ஒரு  சிறிய‌  எலுமிச்சை  அளவு

செய்முறை

இஞ்சியைத்  தோல் சீவி  சிறுசிறு துண்டுகளாக்கி அதனுடன்  தனியாவை சேர்த்து  மிக்சியில் அரைத்து  சாறு  எடுத்துக் கொள்ளவும்   வெல்லத்தைப்  பொடித்து மிக‌  கொஞ்சமாக‌  தண்ணீர் சேர்த்து  அடுப்பிலேற்றி   நன்றாக‌  கரைந்ததும்  எடுத்து வடிகட்டி  மீண்டும்   அடுப்பிலேற்றி  நன்கு  கொதித்தவுடன்  இஞ்சி  சாற்றை ஊற்றி    உடனே  அடுப்பை  அனைத்து விடவும்    காபி  தயார்   அதனுடன்  சிறிது  பாலை  சேர்த்து   பருகவும்                                   சிறு குழந்தைகள் முதல்       பெரியவர்கள் வரை  அனைவரும்   பருகக் கூடிய‌  ந‌ல்ல ஒரு   பான்ம்                                                                                     மாதம்  ஒரு  முறை  பருகினால்  வயிற்றில்   மாந்தம்  சேராது  பித்தத்தினால்  ஏற்படும்  வாந்தியும்   குணமாகும்

 

Friday, 28 October 2011

வடை கறி Meat dumplings

 Meat dumplings
 

வடை கறி
தேவை :
பட்டை – 2
கருவேப்பிலை -
தே. எண்ணெய் – 1
வறுத்து அரைக்க :
தேங்காய் – 2 மே. கரண்டி
பெருஞ்சிரகம் – 1/2 தே. கரண்டி
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 2
மிளகாய் வற்றல் – 4
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 5 பல்
மல்லி விதை – 1 தே. கரண்டி (அல்லது) மல்லி தூள் – 2 தே. கரண்டி
செய்முறை :
  • கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  • அதனுடன் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • பருப்பு வடையை நான்கு நான்காக அதில் பிய்த்து போடவும்.
  • அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
  • கருவேப்பிலையை அதன் மேல் கிள்ளி போடவும்.
குறிப்பு :
வடைகறி சற்று நீர்த்து இருக்கவேண்டும். அப்போதுதான் வடையானது கறியில் நன்கு ஊறி, வடைகறி கெட்டி ஆகிவிடும். இட்லியுடன் சாப்பிட பதமாக இருக்கும்.


Tagged: இட்லி வடைகறி, பருப்பு வடை, வடை கறி, idli, tiffin, vadaikari

Popular Posts

Popular Posts